ஒல்லிக்குச்சி உடம்பு வேணுமா.. இந்த "ஒரே காய்" போதும்.. சர்க்கரை நோயாளிகளின் "சீனி"க்காய்.. பெரிய பலன்
சென்னை: கொத்தவரங்காயை பற்றி தெரிந்துகொண்டாலே, அதை யாராலும் தவிர்க்க முடியாது. அந்த அளவுக்கு மருத்துவ குணத்தை தனக்குள் வைத்திருக்கிறது இந்த காய்.
இதற்கு சீனி அவரக்காய் என்றும் சொல்வார்கள்.. எந்த காய்களின் விலை உயர்ந்தாலும், எப்போதுமே விலை ஏறாத காய் இது மட்டும்தான்.. இந்த காயை நாம் ஏன் சாப்பிட வேண்டும் என்பதற்கு, நிறைய காரணங்கள் உள்ளன..
இந்த காய்களில் கலோரிகள் குறைவாக உள்ளது.. 100 கிராம் கொத்தவரங்காயில், வெறும் 35 கலோரி மட்டுமே இருக்கிறது. புரதங்கள், நார்ச்சத்துக்கள்,வைட்டமின் K, வைட்டமின் C, வைட்டமின் A, ஃபோலியேட்டுகள் மற்றும் ஏராளமான கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன.

சுண்ணாம்பு சத்து: பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு, பொட்டாசியம் ஆகியவை காணப்படுகின்றன.கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்புகள் இல்லை. நார்ச்சத்து, சுண்ணாம்பு சத்து, இரும்புச் சத்து, பொட்டாசியம், மங்கனிசு, பாஸ்பரஸ், பாலிக் ஆசிட் போன்ற சத்துக்கள் இதில் உள்ளன.. எனவே, மலச்சிக்கலை தீர்க்ககூடிய காயாக இது உள்ளது.
முக்கியமாக நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.. அதேபோல உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த கொத்தவரங்காயை அதிகம் சேர்த்து கொள்ளலாம்..
நாம் அதிக நார்ச்சத்து உணவை எடுத்துக்கொண்டால்தான், உடம்பில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ராலை குறைக்க முடியும். அதற்கு இந்த கொத்தவரங்காய் பேருதவி புரிகிறது.. கொத்தவரங்காயில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து இதய நோயின் அபாயத்தை தடுத்து நிறுத்தும்..
கொலஸ்டிரால்: கொத்தவரங்காயில் உள்ள உட்பொருள் ரத்தத்தில் உள்ள அதிகபடியான குளுக்கோஸ் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறதாம். இதை ஆராய்ச்சியாளர்களால், எலிகளை வைத்து பரிசோதித்து அதன்பின்னர் உறுதி செய்துள்ளனர்.. எனவே, மனிதர்களுடைய ரத்த குளுக்கோஸ் அளவிலும் இது போதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறார்கள்.. அதுமட்டுமல்ல, கெட்ட கொலஸ்டிராலை குறைத்து, நல்ல கொலஸ்டிராலை அதிகரிக்க இந்த காய் துணை செய்கிறது. ரத்த சோகை நீக்குகிறது..
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.. கர்ப்பிணிகள் தாராளமாக இந்த காயை சாப்பிடலாம்.. ஏராளமான பிறப்பு பிரச்சினைகள் மற்றும் கர்ப்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கிறது..
கருவில் உள்ள குழந்தைகளுக்கு இரும்பு + கால்சியம் குறைபாடுகளை இந்த காய் சரிசெய்துவிடும். வைட்டமின் A இதில் உள்ளதால், கண்பார்வைக்கும் நல்லது.. இதிலுள்ள ஆக்ஸிஜனேற்றிகள், வயிற்றில் புண்களை ஏற்படுத்தாமல் பாதுகாக்கிறது. ஆஸ்துமா தொல்லையால் பாதிக்கப்படுகிறவர்கள் கொத்தவரங்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
யாரெல்லாம் சாப்பிடக்கூடாது: இந்த காய் நிறைய நார்ச்சத்துக்களை கொண்டது என்பதால், திடீரென அதிகமாக நார்ச்சத்துக்களை எடுக்கும்போது வயிறு மற்றும் வாயுத்தொல்லையை உண்டாக்கலாம். அதனால், ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து கொள்வது நல்லது.. பிறகு, பத்தியம் இருந்து மருந்து சாப்பிடுபவர்கள், இந்த கொத்தவரங்காயை சாப்பிடக்கூடாது என்கிறார்கள்.. அதேபோல, வாதம், பித்தம் உள்ளவர்களும் இந்த காயை அடிக்கடி சாப்பிடக்கூடாதாம்..
புளிக்குழம்பு: பொதுவாக, இந்த பிஞ்சு காயை பொறியல் செய்வார்கள்.. கொஞ்சம் துவரம் சேர்த்து கூட்டாக செய்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.. அவியலிலும் சேர்ப்பார்கள்.. அதேபோல முற்றிய கொத்தவரங்காயை வற்றல் போட்டு, அதையும் வறுத்து சாப்பிடுவார்கள்.. சிலர் புளிக்குழம்பிலும் போடுவார்கள்.. இது அதிகம் சாப்பிட்டால் வாயு என்று சொல்லப்படுவதால், அளவோடு எடுத்து கொள்வது எப்போதுமே நல்லதுதான்..!!
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications