இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. வேலையைக் காட்டிய விசிக! விஜய்க்கு பெரிய தலைவலி! திமுகவின் ப்ளானா?
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையிலான கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, தற்போதைய சமூகநீதி துறைக்கு பதிலாக முக்கியத்துவம் வாய்ந்த வேறு ஒரு துறையை அமைச்சரவையில் கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் முதல்வ விஜய் தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அப்படியெல்லாம் இல்லை என்கின்றனர் விசிகவினர்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தமிழக பரபரப்பான அரசியல் சூழல் உருவான நிலையில், தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை பதவியேற்றபோது, கூட்டணியில் இருந்த பல கட்சிகளுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது.

அந்த வரிசையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் ஒரு அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டது. விசிகவின் மூத்த நிர்வாகியான வன்னி அரசு சமூகநீதி துறை அமைச்சராக பொறுப்பேற்றார். ஆனால் தற்போது அந்த துறைக்கு பதிலாக முக்கிய துறையை வழங்க வேண்டும் என்று விசிக தரப்பில் வலியுறுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
விடுதலை சிறுத்தைகள்
அமைச்சரவை விரிவாக்கத்திற்கு முன்பாகவே விடுதலை சிறுத்தைகள் கட்சியை அமைச்சரவையில் சேர்ப்பது தொடர்பாக பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அப்போது எந்த துறை வேண்டுமானாலும் வழங்க தயாராக இருப்பதாக தமிழக வெற்றிக் கழக தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அமைச்சர் பதவியை யார் ஏற்க வேண்டும் என்ற விவகாரத்தில் விசிகவுக்குள் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
அமைச்சரவை மாற்றம்
குறிப்பாக வன்னி அரசுவை அமைச்சராக்குவது குறித்து சில நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. அந்த சூழலில் அமைச்சரவை பதவி தேவையில்லை என்ற கருத்தை விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வெளிப்படையாக தெரிவித்தராம். பின்னர் முதல்வர் விஜய் நேரடியாக பேசியதைத் தொடர்ந்து அமைச்சரவையில் இடம்பெற அந்தக் கட்சி சம்மதித்தது.
வன்னி அரசு
அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் காலகட்டத்தில், எந்த துறையை பெறுவது என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சமூகநீதி துறை, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதன்பிறகு வன்னி அரசு அமைச்சராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். இருப்பினும் சமூகநீதி துறை தனித்துவமான முக்கியத்துவம் கொண்டதாக இருந்தாலும், நிர்வாக ரீதியாக பெரிய அளவிலான அதிகாரங்கள் இல்லாத துறையாகவே பார்க்கப்படுகிறது.
போக்குவரத்து, உயர்கல்வி
இதனால் கட்சிக்குள் சிலர் அதிருப்தி தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக மக்களுடன் நேரடி தொடர்பு அதிகம் உள்ள துறைகள் கிடைத்தால் கட்சியின் செல்வாக்கு மேலும் அதிகரிக்கும் என்ற கருத்து நிலவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் தகவலின்படி, போக்குவரத்து, உயர்கல்வி போன்ற முக்கிய துறைகள் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
சமூகநீதி துறை
இந்த துறைகள் மாநிலம் முழுவதும் மக்களிடம் தொடர்பை ஏற்படுத்தும் துறைகளாக கருதப்படுகின்றன. குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் ஆகியோருடன் நேரடி தொடர்பு கொண்டிருப்பதால் அரசியல் ரீதியாகவும் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இதனால் சமூகநீதி துறைக்கு பதிலாக அத்தகைய முக்கிய துறைகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கூட்டணி மட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சரவை மாற்றம்
அமைச்சர் பதவி வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் இருந்து பின்னர் அமைச்சரவையில் இடம்பெற்ற நிலையில், தற்போது மேலும் பெரிய துறையை கோருவது குறித்து தமிழக வெற்றிக் கழக வட்டாரங்களில் சில அதிருப்திகள் நிலவுவதாக கூறப்படுகிறது. கூட்டணி அரசில் அனைத்து கட்சிகளுக்கும் சம உரிமை வழங்க வேண்டிய சூழல் இருப்பதால், ஒரு கட்சிக்காக அமைச்சரவை மாற்றம் செய்வது மற்ற கூட்டணி கட்சிகளிடமும் கேள்விகளை எழுப்பக்கூடும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
திமுக
அதே நேரத்தில் கூட்டணி ஒற்றுமையை பேணுவது முதல்வர் விஜய்க்கு முக்கிய சவாலாக இருக்கும் என்பதால், இந்த விவகாரத்தில் சமரச தீர்வு காணப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோரிக்கைக்கு தமிழக வெற்றிக் கழக தலைமை என்ன பதில் அளிக்கப் போகிறது, அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதே நேரத்தில் அப்படியெல்லாம் இல்லை. இது திமுக கிளப்பி விட்ட வதந்தி என்கின்றனர் விசிகவினர்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications