Asthma home remedy: வெற்றிலை+ ஒரு துண்டு இஞ்சி போதும்! 48 நாளில் கரைந்தோடும் சளி! ஆஸ்துமாவுக்கு பைபை
சென்னை: சிலருக்கு சளி பிடித்தாலே போதும் அதுவே பெரிய பிரச்சினையாக கண்களிலும் தாடைகளிலும் நீர் கோர்த்து கொண்டு பாடாய்படுத்தி எடுத்துவிடும். அதிலும் ஆஸ்துமா உள்ளவர்களுக்கு காலை எழுந்ததும் தும்மல் போட்டே சோர்வாகிவிடுவார்கள். இந்த ஆஸ்துமா குணமாகவும் நெஞ்சு சளியை கரைக்கவும் எளிய முறை வீட்டு வைத்தியத்தை பார்க்கலாம்.
இதுகுறித்து அத்திமரக்காடு எனும் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: கரையாத சளியையும் கரைக்கும் நாட்டு மருந்து!!

சுவாசத் தொகுதி தொடர்பான நோய்கள் பல அசெளகரியங்களை ஏற்படுத்துகின்றன. முக்கியமாக நுரையீரலில் தங்கி நிற்கும் சளி மற்றும் இருமல் போன்றவை எமது அன்றாட வாழ்வில் பல இன்னல்களை ஏற்படுத்தும். இவற்றுக்கு சரியான நிவாரணம் கிடைக்காவிடின், அதுவே வைத்திய உதவியை நாடவேண்டிய சுகாதாரப் பிரச்சினையாக மாறிவிடும்.
நெஞ்சு சளி, மூச்சுத்திணறல், ஆஸ்துமா, இருமல், கரையாத நுரையீரல் சளி மற்றும் நுரையீரல் தொடர்பான பல நோய்களுக்கும் நிவாரணம் அளிக்கும் ஓர் எளிய நாட்டு மருந்து பற்றி இங்கே பார்க்கலாம். இதை நீங்கள் செலவே இல்லாமல் வீட்டில் செய்து பார்க்க முடியும்.
தேவையான பொருட்கள்
ஒரு வெற்றிலை.
தோல் நீக்கிய ஒரு சிறிய துண்டு இஞ்சி.
சிறிதளவு தேன்.
செய்முறை
வெற்றிலையை அதன் காம்பை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும். வெற்றிலைத் துண்டுகள் மற்றும் இஞ்சியுடன் 1 ஸ்பூன் வெந்நீரை சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து, அந்த சாற்றை வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் காரத் தன்மையை குறைக்க சிறிதளவு தேன் சேர்த்துக் கொள்ளலாம். இப்போது நாட்டு மருந்து தயாராகிவிட்டது.
நெஞ்சு சளி, இருமல் போன்ற பிரச்சினைகளால் அவதியுறுபவர்கள் இதனை செய்து தொடர்ந்து 1 வாரத்திற்கு காலை, மாலை என 10 மில்லிலிட்டர் அளவில் அருந்திவர இந்த பிரச்சினைகள் இல்லாமல் போகும். நெஞ்சிலுள்ள கரையாத சளியும் கரைந்துவிடும். இதை அருந்துவதால் செரிமான பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்.
நுரையீரல் சம்பந்தமான நோய்கள், மூச்சுத்திணறல், ஆஸ்துமா போன்ற நோய்களால் கஷ்டப்படுபவர்கள் இந்த 10 மில்லிலிட்டர் சாற்றை காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 48 நாட்கள் குடித்துவர நுரையீரல் பிரச்சினைகள் குணமாகி, நுரையீரல் ஆரோக்கியமானதாகவும் பலமுள்ளதாகவும் மாறிவிடும். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications