சேற்றுப் புண்ணுக்கு சரியான மருந்து இதுவே.. வெற்றி தரும் வேப்பிலை.. சேற்றுப்புண்களுக்கு சிறந்த மூலிகை
சென்னை: சேற்றுப்புண்கள் ஏன் வருகின்றன தெரியுமா? யார் யாருக்கு சேற்றுப்புண்கள் பாதிப்பு விரைந்து தாக்கும்? இதற்கு எளிய மருந்துகள் உள்ளனவா? சேற்றுப்புண்களிலிருந்து நம்மை காத்து கொள்ள என்னென்ன செய்ய வேண்டும்? எளிய வழிமுறைகளை பார்க்கலாம்.
கால் விரல்களுக்கு இடையே உள்ள சவ்வு பகுதியில் ஏற்படுகிறது சேற்றுப்புண்கள்.. இது "அத்தலட்ஸ் புண்" அதாவது"டீனியா பெடிஸ்" என்ற பூஞ்சை வகை நோயாகும்..

என்ன காரணம்: சேறு, நீண்ட நாள் தேங்கிய தண்ணீர், கழிவு நீர் போன்றவற்றில் நுண்கிருமிகள் உருவாகி, இதுவே தொற்றினால் கால்களில் புண்ணாக உருவெடுத்து விடுகிறது.. இந்த புண்களையே சேற்றுப்புண் என்று சொல்கிறோம்.. வியர்வை அதிகமாகிவிட்டால், இந்த சேற்றுப்புண்கள் வேகமாக வளர்ந்துவிடும்.
அதேபோல, நம்முடைய கால்களை சரியாக சுத்தப்படுத்தாமல் விட்டால், சேற்றுப்புண் வரும். இதுபோன்ற புண்கள், விரல்களுக்கு நடுவில் மட்டுமல்லாமல், பாதங்களிலும் பாதிப்பை தந்துவிடும்.. இதேபோல, வயல்களில் வேலை செய்பவர்கள் மற்றும் மழைக்காலங்களில் செருப்பு இல்லாமல் நடப்பவர்களுக்கும் இந்த புண்கள் வந்துவிடும். முதலில் தோல் உரிய ஆரம்பித்து, பிறகு புண்ணாக மாறும்.
கிளிஞ்சல்: இந்த சேற்றுப்புண்களை எளிய முறையில் குணப்படுத்தலாம். சேற்றுப்புண் பாதிப்பு இருந்தால் காலை மற்றும் இரவில் கால்களை வெந்நீரில் கழுவ வேண்டும். பிறகு அமிர்த மெழுகு, கிளிஞ்சல் மெழுகு, வங்க வெண்ணெய் இவைகளில் ஏதாவது ஒன்றை பூசிவந்தால் புண்கள் ஆறும்.. அதேபோல, கடுக்காய், மாசிக்காய், தான்றிக்காய் போன்ற மூலிகைகளை பவுடர் செய்து, இந்த புண்களை கழுவலாம்.. காரணம், இவையெல்லாம் துவர்ப்பு நிறைந்த மூலிகையாகும்.
அதேபோல, வேப்பந்தளிர்களை நீரில் அவித்து, அந்த தண்ணீரை கொண்டும் சேற்றுப்புண்களை கழுவலாம்.. ஒரு கைப்பிடி வேப்பிலையுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து நன்றாக அரைத்து பூசலாம்.. வேப்பெண்ணெயைக் காய்ச்சி புண்ணில் பூசலாம்.. அறுகம்புல்லுடன் மஞ்சளை சேர்த்து அரைத்தும் சேற்றுப்புண் உள்ள இடங்களில் பூசினால், புண்கள் ஆற துவங்கும். மருதாணி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்தும் பூசலாம்.
எலுமிச்சம் பழம்: அதேபோல, சுடுநீரில் உப்பு அல்லது எலுமிச்சை பழச்சாறு கலந்தும் சேற்றுப்புண்களை கழுவலாம். அரிசியை அலசும் தண்ணீரை கொதிக்க வைத்தும், பாதங்களை கழுவி, ஈரப்பதம் இல்லாமல் துடைத்து விட வேண்டும். தேங்காய் எண்ணெயுடன் மஞ்சளை சேர்த்து, குளிப்பதற்கு முன்பு, காலில் தடவி குளித்தாலும் சேற்றுப்புண் அண்டாது..
குழந்தைகளுக்கு காலில் சேற்றுப்புண் வந்தால் வெண்ணெயை தடவினால், எரிச்சல் அடங்கும். ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு சேற்றுப்புண் பாதிப்பு ஏற்பட்டால், உடனடியாக டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications