பச்சை வைரம் துத்திக்கீரை.. முறிந்த எலும்பு முதல் மூலம், கிட்னி பிரச்சனைக்கு உதவும் துத்தி இலை.. செம
சென்னை: மூலம் நோய்களுக்கு சரியான தீர்வை தரும் துத்திக்கீரையை பற்றி தெரியுமா? ஒட்டுமொத்த குடல ஆரோக்கியத்துக்கும் துத்தி கீரைகள் மருந்தாக காரணம் என்ன தெரியிமா? குளிர்ச்சி நிறைந்த துத்திக்கீரைகள் தரும் மருத்துவ குணங்கள் என்னென்ன? யார் எலும்பு முறிவு ஏற்பட்டோருக்கு இந்த கீரை தரும் நன்மை என்னென்ன என்பதை சுருக்கமாக பார்ப்போம்.
துத்திக்கீரைகள் என்பது மற்ற கீரைகளை போலவே சமையலுக்கு பயன்படக்கூடியவை.. இதய வடிவில் இலைகளும், சக்கர வடிவில் காய்களுக்கும் இருக்கும். பாசிபருப்பு, சின்னவெங்காயம், சீரகம் சேர்த்து கடைந்து சாப்பிட்டால் அபார ருசியாக இருக்கும்.

துத்திக்கீரை துவையல்
அல்லது சின்ன வெங்காயம், துவரம்பருப்பு. மிளகுத்தூள் சேர்த்து இந்த கீரையை கூட்டு போலவும் சாப்பிடலாம். வெறுமனே துத்தி கீரையில் கசாயம் போல வைத்து குடிக்கலாம். அல்லது சின்ன வெங்காயம், பச்சை பயறு சேர்த்தும் கூட்டு வைக்கலாம். அல்லது தோசை மாவுடன் துத்திக் கீரையை பொடியாக நறுக்கி போட்டு தோசை சுட்டு சாப்பிடலாம்.
இந்த இலையில் ரசம் வைத்து குடித்தால், கிட்னி தொந்தரவுகள் நெருங்காமல் இருக்கும்.. கல்லீரல் நோய், புற்றுநோய் , ஆஸ்துமா, காசநோய்கள் போன்றவைகளை குணமாக்க துத்திக்கீரைகள் மருந்தாக பயன்படுகின்றன. இதன் இலைகள், பூக்கள், காய்கள், வேர்கள், போன்றவைகளை வைத்து கஷாயம் போல வைத்து குடித்தால் ஆண்களுக்கு நரம்புகளுக்கு வலு கொடுக்கும்..
உஷ்ண கோளாறுகள்
துத்திக்கீரைகள் குளிர்ச்சியை தரக்கூடியது.. எனவே உஷ்ணம் சம்பந்தமான கோளாறுகளை துத்திகீரை தீர்க்கிறது.. குறிப்பாக அபாயகரமான மூலம் பிரச்சனையை தீர்க்கிறது.. துத்தி இலைகளை அரைத்து சாறு போல வெறும் வயிற்றில் 1 கிளாஸ் குடித்து வந்தால் மூலம் கட்டுக்குள் வரும்..
உடம்பில் உஷ்ணக்கோளாறுகள் இருந்தால், துத்தி இலைகளை சுத்தம் செய்து தூள் செய்து, பசும்பாலில் கலந்து குடிக்கலாம். இதனால், உஷ்ண கட்டிகள், புண், போன்றவை ஆறிவிடும்.. உடையாத கட்டிகள் இருந்தால், துத்திக்கீரையிலிருந்து சாறு எடுத்து, அரிசி மாவுடன் கலந்து சாப்பிடலாம்
எலும்புகள் கூடிட
சிறுநீர் எரிச்சல், சிறுநீர் கடுப்பு, வாயு வியாதிகள், குடல்புண்கள், போன்றவற்றை ஆற்றுகிறது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய துத்திக்கீரைகள் ஜீரண தொந்தரவுகளையும் சீராக்குகிறது. எலும்பு முறிவு ஏற்பட்டால், துத்திக்கீரையை அரைத்து பூசி கட்டினால், எலும்புகள் கூடிவிடும்.
துத்தி இலையை தண்ணீரில் போட்டு குதிக்க வைத்து, அந்த நீரில் வாய் கொப்பளித்து வரும்போது பற்கள், ஈறுகள் வலுப்படும்.. கர்ப்பப்பை தொந்தரவு, மாதவிலக்கு தொந்தரவு இருந்தால், துத்தி இலைகளை நெய்யில் வதக்கி சுடுசோற்றில் கலந்து சாப்பிடலாம் அல்லது துத்திக்கீரையின் விதையை தூள் செய்து குடித்தாலும் பெண்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications