அக்குள் வியர்வை ஓவரா இருக்கா? அக்குளில் வியர்வை நாற்றத்தை போக்க தக்காளி போதுமே.. இதோ சூப்பர் டிப்ஸ்
சென்னை: சிலருக்கு அக்குள் பகுதியில், அதிகமாகவே வியர்க்கும்.. இந்த வியர்வை நாற்றத்தை போக்க எளிமையான வழிகள் என்னென்ன தெரியுமா?
வியர்வை அதிகமாக இருப்பவர்கள் உணவு முறையிலும் சில மாற்றங்களை கொண்டுவந்தால், இதற்கு தீர்வு கிடைக்கும்.. முதலில், உணவில், பூண்டு, வெங்காயம் போன்றவற்றை தவிர்க்கலாம்..

உணவு முறை: காஃபின் அதிகம் உட்கொள்வதை தவிர்க்கலாம்.. காரணம், காஃபின் உங்கள் வியர்வையையும், நரம்பியல் செயல்பாட்டையும் அதிகரிக்கிறது.. அத்துடன், ரத்த அழுத்தம், இதய துடிப்பையும், உடல் வெப்பநிலையையும் அதிகரிக்க செய்கிறது.. அதேபோல, பதப்படுத்தப்பட்ட உணவுகள், மதுபானங்களையும் தவிர்க்க வேண்டும்..
கொழுப்பு உணவுகள், காரசாரமான உணவுகள், ஐஸ் கிரீம் போன்றவற்றையும் தவிர்க்கலாம். இவைகளுக்கு பதிலாக, கால்சியம் நிறைந்த பால், சீஸ் போன்ற உணவுகளை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
பழ வகைகள்: பாதாம் பருப்பு, வாழைப்பழங்களை சாப்பிட்டு வருபவர்களுக்கு வியர்வைகள் அதிகரிப்பதில்லை.. மேலும், நீர்க்காய்களையும், தர்பூசணி, திராட்சை, முலாம் பழம் போன்ற பழங்களையும் உணவில் சேர்த்து கொள்ளலாம். ஓட்ஸ், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பிரக்கோலி, கீரைகள், காலிஃப்ளவர், கத்தரிக்காய் போன்றவைகளும் வியர்வை சுரப்பை கட்டுப்படுத்தும்.
அக்குளில் வியர்வை நாற்றம் அதிகமாக இருந்தால், அக்குள் முடிகளை கட்டாயம் நீக்க வேண்டும். இது அதிகப்படியாக வியர்ப்பதையும், வியர்வை நாற்றத்தையும் ஓரளவு குறைக்கும்..
துர்நாற்றம்: அதேபோல, குளித்து முடித்ததுமே, உடனே ஆடைகளை அணிந்துகொள்ளாமல், சற்று நேரம் கழித்து அணியலாம்.. அடிக்கடி முகம், கை, கால்களை கழுவிக்கொள்ள வேண்டும். இதுபோன்ற செயல்பாடுகளால் அதிக வியர்வையால் ஏற்படும் உடல் துர்நாற்றம் வராமல் தடுக்கலாம்.
சித்த மருத்துவத்தில் அதிக வியர்வை மற்றும் வியர்வை நாற்றத்துக்கு தீர்வு உண்டு.. குறிப்பாக, திரிபலா சூரண மாத்திரை, அமுக்கரா சூரண மாத்திரை, குங்குமப்பூ மாத்திரை போன்றவற்றை சாப்பிடலாம். ஆனால், சித்த மருத்துவர்களின் ஆலோசனையை பெற்றே இதனை மருந்தாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
குளிக்க பவுடர்: அதேபோல, உடலில் தேய்த்து குளிக்க பவுடர் ஒன்றை நாமே வீட்டில் தயாரிக்கலாம்.. திரிபலா சூரணம், கார்போக அரிசி, ரோஜாமொக்கு, கஸ்தூரி மஞ்சள், கிச்சிலிக் கிழங்கு, ஆவாரம்பூ, கருஞ்சீரகம், கசகசா, சந்தனத் தூள், பாசிப் பயறு, வெந்தயம், எலுமிச்சம்பழத் தோல், மருதாணி போன்றவைகளை எல்லாம் அரைத்து வைத்து கொண்டால் போதும். இந்த குளியல் பொடியை பயன்படுத்தி தினமும் 2 வேளை குளித்து வந்தாலும் துர்நாற்றம் அடிக்காது.
அதேபோல, தினமும் குளிக்கும்போது, தண்ணீருடன் எழுமிச்சம் சாறு சேர்த்து, அரை மணிநேரத்தில் குளித்தால கிருமிகள் அழிந்து துர்நாற்றமும் அடிக்காது. சந்தன கட்டையை, தண்ணீரில் குழைத்து அக்குளில் இரவு தூங்கும் போது தினமும் பூசி வந்தாலும் நிவாரணம் கிடைக்கும்..
கற்றாழை: அல்லது தினமும் குளிப்பதற்கு முன்பு, தயிருடன் ரோஸ் வாட்டர் கலந்து அக்குளில் பூசி அரை மணி நேரம் கழித்தும் குளிக்கலாம். அதேபோல கற்றாழையை அக்குளில் தேய்த்து மசாஜ் செய்து குளிக்கலாம்.. அல்லது தக்காளியை மிக்ஸியில் அரைத்து, அக்குளில் தடவி அரை மணிநேரம் கழித்து குளிக்கலாம்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications