குழந்தைகளுக்கு வீசிங் எதனால் வருகிறது...எப்படி சரி செய்வது?
சென்னை: இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் எதிர்கொள்ளக்கூடிய உடல் நல பதிப்புகளில் ஒன்று மூச்சுத்திணறல் (wheezing) தொந்தரவு ஆகும். நம்முடைய சுவாசக்குழல்கள் மூலமாய் மூச்சு காற்றை நுரையீரலுக்கு கொண்டுசெல்லும் குழாய்களில் பாதிப்பு உண்டாகி, உட்பகுதியில் வீக்கம் ஏற்படுகிறது. அதிக சளி, சுற்றுசூழலில் அதிக தூசு, மழையில் நனைவது ஆகிய காரணத்தினால், மூச்சுத்திணறல் வருகிறது. சமீபகாலமாக அனைத்து வயதினருக்கும் இப்பிரச்சனை இருப்பது என்பது சர்வசாதாரணமாயிற்று. குறிப்பாக குழந்தைகளுக்கு சளி அதிகமாகும்போது மூச்சுத்திணறல் ஏற்படும் நேரத்தில் நெபுலைசர் (Neubuzilizer) வைத்து சரி செய்து இயல்பானதே.

குழந்தைகளுக்கு தவிர்க்க வேண்டிய உணவுகள்: சளி அடிக்கடி பிடிக்கும் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் (wheezing) வருவதற்கு முக்கிய காரணம் சுற்றுப்புற சுழல்நிலை, உணவு முறைகள், சளி பிடிப்பதற்கு அதிகமான இனிப்பு வகையான சாக்லேட் உட்கொள்வது, தினமும் அதிக அளவில் பால் குடிப்பது மற்றும் இரவிலும் பால் குடிப்பது போன்ற பல காரணங்கள் உள்ளது. கால்சியம் தேவையுள்ள குழந்தைகளுக்கு பாலில் தண்ணீர் சேர்த்து நீர்த்தபாலாகவும், அதில் சக்கரைக்கு பதிலாக பனங்கற்கண்டு சேர்த்தும் கொடுப்பது மிகவும் நல்லது. பாலில் சற்று அதிகமான தண்ணீர் சேர்ப்பதால் குழந்தைகளுக்கு கபத்தை உண்டாக்குவதை தவிர்க்கும். நீர்காய்கறிகள் சொரைக்காய், பூசணிக்காய், தர்பூசிணி, வெள்ளரி, சௌ சௌ, ஆகிய காய் வகைகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

குழந்தைகளுக்கு மலசிக்கல் வராமல் தவிர்க்க: குழந்தைகள் சரியாக மலம் கழிக்கவில்லை என்றாலும் இப்பிரச்சனை ஏற்படும். இரவு வாழைப்பழம் கொடுப்பதை பார்க்கிலும், காலை உணவுக்கு முன் ஒரு வாழைப்பழம் சாப்பிடக்கொடுத்த பிறகு உணவு உடகொள்வது குழந்தைகளுக்கு செரிமான மண்டலத்தை சரிசெய்து, மலசிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கும். 1-3 வயது குழந்தைகளுக்கு சிறிது உலர்திராட்சை வெந்நீரில் ஊறவைத்து, மாலையில் அந்த தண்ணீரை குடிக்க செய்துவந்தால், மலசிக்கல் வராமல் தடுக்கும். நார்சத்து உள்ள உணவுகள், கீரை வகைகள், போன்ற உணவுகளை பழகிவந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

நெஞ்சு சளி கரைய வீட்டு கஷாயம்: குழந்தைகளுக்கு நெஞ்சு சளி கரைய மிளகு கஷாயம், கற்பூரவள்ளி கஷாயம், தேன், ஆகிய கஷாயங்களை வீட்டிலேயே செய்து கொடுக்கலாம். 5-6 மிளகு இடித்து தண்ணீரில் கொதிக்கவைத்து, மிதமான சூட்டில் தேன் கலந்து கொடுக்கலாம். 2-3 கற்பூரவள்ளி இலை, சிறிது மிளகு நசுக்கி சாரை எடுத்து தேன் கலந்து கொடுக்கலாம், அல்லது, கற்பூரவள்ளி இலையை தண்ணீரில் கொதிக்கவைத்து, அதனுடன் தேன் கலந்து கொடுக்கலாம். தூதுவளை கீரை ரசம் போல் செய்து கொடுக்கலாம். இந்த வீட்டு வைத்தியங்களில் ஏதேனுமொன்றை வாரத்தில் 1 முறை செய்து தொடர்ச்சியாக கொடுத்துவந்தால், நெஞ்சு சளி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க செய்ய உதவும். குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே முறையான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை பழக்கப்படுத்துவது, அவர்களின் எதிர்காலத்தில் நல்ல அரோக்கியத்துடன் வாழலாம்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications