சொந்த ஊரிலேயே வேலை.. மாவட்ட நீதிமன்றங்களில் 2,323 பணியிடங்கள்.. 8ம் வகுப்பு தகுதி! இன்றே கடைசி நாள்
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2,323 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த சான்ஸை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு பிரிவு தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் ஏற்படும் காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது. உரிய அறிவிப்புகளை வெளியிட்டு, எழுத்து தேர்வு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்த பணியிடங்களை நிரப்பி வருகிறது.

அந்த வகையில் தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அலுவலக உதவியாளர், பன்முக உதவியாளர், நகலர், டிரைவர், காவலர் என மொத்தம் 2,323 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்..
பணியிடங்கள் விவரம்:
அலுவலக உதவியாளர் - 638,
காவலர் / இரவுக்காவலர் - 459,
மசால்ஜி (பன்முக உதவியாளர்) - 402,
இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் - 242,
தூய்மை பணியாளர் - 202
முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் - 100
டிரைவர் - 27
தூய்மை பணியாளர் - 202, என 17 வகையான பணிகளில் மொத்தம் 2,323 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
வயது வரம்பு, சம்பளம்: வயது வரம்பை பொறுத்தவரை 01.07.2024 தேதிப்படி 18 வயது பூர்த்தியானவர்களும் 32 வயதுக்கு மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. சம்பளத்தை பொறுத்தவரை பணியிடங்களுக்கு ஏற்ப மாறுபடும். அதிகபட்சமாக 71,900 வரை சம்பளமாக கிடைக்கும்.
கல்வி தகுதி: அலுவலக உதவியாளர் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு நிகராக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதி வண்டி ஓட்ட தெரிந்து இருக்க வேண்டும். டூவீலர், கார் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
டிரைவர் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். 5 ஆண்டுகள் முன் அனுபவம் அவசியம். தூய்மை பணியாளர், தோட்ட பணியாளர், வாட்ச்மேன், மசால்ஜி உள்ளிட்ட பணியிடங்களுக்கு தமிழில் எழுதபடிக்க தெரிந்து இருந்தால் போதும். கல்வி தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வர்கள் தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்ப கட்டணம்: ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. இது குறித்த முழுமையான விவரங்களை தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.. ஆன்லைன் மூலம் இன்று (28.04.2024) முதல் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ( 27.05.2024 )ஆகும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதார்கள் தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படித்துவிட்டு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு அறிவிப்பினை தெரிந்து கொள்ள https://www.mhc.tn.gov.in/recruitment/login கிளிக் செய்யவும். மாவட்ட வாரியாக பணியிடங்கள் பிரித்துகொடுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் விரும்பும் மாவட்டத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.
-
மத்திய பாதுகாப்பு படையில் ஹெட் கான்ஸ்டபிள் வேலை.. 233 காலியிடங்கள்! 81 ஆயிரம் சம்பளம்! விட்றாதீங்க -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications