வேலையில்லாம இருக்கீங்களா?.. ஓட்டுநர் அனுபவம் இருக்கா?.. 685 காலி பணியிடங்கள்.. இன்று கடைசி நாள்
சென்னை: தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 685 ஓட்டுநர், நடத்துநர்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் இந்த பணிக்கு தகுதியுடைய நபர்கள் ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் செப்டம்பர் 18ஆ் தேதி வரை மதியம் 1 மணி வரை www.arasubus.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். பணி நியமனம் முற்றிலும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும். தகுதி அடிப்படையில் மட்டுமே நியமனம் நடைபெறும். தகுதி பெறும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, ஓட்டுநர்- நடத்துநர் திறன் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக் கட்டணம்: ரூ.600 செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.300 மட்டும் கட்டணமான செலுத்த வேண்டும்.












Click it and Unblock the Notifications