நோ எக்ஸாம்.. இன்டர்வியூ மட்டுமே.. மாதஊதியம் ரூ.43,000.. ஈரோடு ஆவினில் சூப்பர் வேலைவாய்ப்பு
ஈரோடு: தமிழ்நாட்டில் ஆவினில் காலியாக உள்ள பணியிடங்கள் தொடர்ந்து நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ரூ.43 ஆயிரம் மாதசம்பளத்துடன் ஈரோடு மாவட்ட ஆவினில் காலி பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் பால்வளத்துக்கு என்று தனியாக அரசு சார்பில் துறை செயல்படுத்தி வருகிறது. ஆவின் பால்வளத்துறை அமைச்சராக மனோ தங்கராஜ் உள்ளார். இந்நிலையில் தான் பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் ஈரோடு மாவட்ட ஆவினில் காலியாக உள்ள பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

அதன்படி ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் யூனியன் லிமிடெட்டில் காலியாக உள்ள ஒரு வெட்னரி கன்சல்டன்ஸ் (கால்நடை ஆலோசகர்) பணியிடத்தை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிக்கு இளங்கலை வெட்னரி சயின்ஸ் & அனிமல் ஹஸ்பன்ட்ரி படிப்பை (B.V.Sc. & A.H) அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்திருப்பதோடு, கம்ப்யூட்டர் அறிவு பெற்றிருக்க வேண்டும்.
இது ஒரு ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக பணியாகும். தேர்வாகும் நபர்கள் ஓராண்டு பணியமர்த்தப்படுவார்கள். மாத சம்பளமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. மேலும் Propulsion charges ஆக ரூ.8 ஆயிரம், Individual Incentive ஆக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் மாதம் ரூ.43 ஆயிரம் வரை சம்பளமாக கிடைக்கும். இந்த பணிக்கு எழுத்து தேர்வு எதுவும் இல்லை. நேர்க்காணல் மட்டுமே உள்ளது.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நேரடியாக நேர்க்காணலில் பங்கேற்கலாம். நேர்க்காணல் வரும் 16ம் தேதி மதியம் 2 மணிக்கு நடைபெற உள்ளது. இருப்பினும் அன்றைய தினம் அனைவரும் காலையிலேயே அங்கே சென்றுவிட வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் தங்களின் பயோடேட்டா, சுயசான்றொப்பமிட்ட அசல் கல்வி சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றுடன் நேர்க்காணலில் பங்கேற்க வேண்டும். நேர்க்காணல் என்பது ஈரோடு மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், சித்தோடு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தொடர்பு எண் : 88836 00107












Click it and Unblock the Notifications