பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் ஏராளமான வேலை.. விண்ணப்பிக்க ரெடியா? மிஸ் பண்ணிடாதீங்க!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தொழில்நுட்பதுறை அதிகாரி, சயின்டிபிக் அதிகாரி, தொழில்நுட்ப பணியாளர்கள் உள்பட மொத்தம் 212 பணியிடங்கள் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) உள்ளன. இவற்றுக்கு விருப்பம் உள்ளவர்கள் மே 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் 4162 பேருக்கு பயிற்சி பணி வாய்ப்புகளும் உள்ளன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

bhabha atomic research centre recruitment 2023 : how to apply this job, check details

நேரடி பணிவாய்ப்பு மற்றும் பயிற்சி பணிவாய்ப்பில் எத்தனை காலிபணியிடங்கள் உள்ளது என்பதை விவாரமாக பார்ப்போம்:

நேரடி பணி வாய்ப்பு:

தொழில்நுட்பத் துறை அதிகாரி - 181

சயின்டிபிக் உதவியாளர் - 7

தொழில்நுட்பவியலாளர் - 24

மொத்த காலிப்பணியிடங்கள் - 212

பயிற்சி பணி வாய்ப்பு:

முதல் பிரிவு - 1,216

இரண்டாம் பிரிவு - 2,946

மொத்தக் காலிப்பணியிடங்கள் - 4,162

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு கல்வி தகுதி, ஒவ்வொரு பணிக்கு தகுந்தாற்போல் உள்ளன. பிஇ அல்லது பட்டப்படிப்பு (விண்ணப்பிக்கும் பதவியை பொறுத்து) படித்திருக்க வேண்டும். இதில் ஒவ்வொரு பணிக்குமான முன்னுரிமை படிப்புகள் குறித்த விவரங்களைப் பற்றி தெரிந்துகொள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் முழு பிடிஎப் பைலை பாருங்கள். இந்த செய்தியுடன் பிடிஎப் பைல் இணைக்கப்பட்டிருக்கிறது.

எத்தனை வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்:

விண்ணப்பதாரர் 18 வயது நிரம்பியவராகவும், 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். மேலும் அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. இது குறித்த விரிவான தகவல்களுக்கு https://www.barc.gov.in/careers/vacancy2.pdf என்ற லிங்கில் பார்க்கலாம்.

எப்படி விண்ணப்பிப்பது?

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://barconlineexam.com/ என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பதாரர்கள் பதிவுக் கட்டணம் செலுத்தி, தங்களது அடிப்படை விவரங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். பெண்கள், பட்டியலினத்தவர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

முக்கிய தேதி:

மே 22ஆம் தேதிக்குள் இணைய வழியில் மட்டும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வு மையம்:

நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் தேர்வு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, காஞ்சிபுரம், மதுரை ஆகிய மையங்களில் தேர்வு நடைபெறும். விண்ணப்பதாரர் தேர்வு எழுதுவதற்கு ஏதேனும் மூன்று தேர்வு மையங்களைத் தேர்ந்தெடுக்கலாம். இதில் ஏதேனும் ஒரு மையம் விண்ணப்பதாரருக்கு தேர்வு மையமாக ஒதுக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

முதல் நிலைத் தேர்வு, இரண்டாம் கட்டத் தேர்வு, தகுதித்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு https://www.barc.gov.in/careers/vacancy8.pdf என்கிற இணைப்பில் அறியலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+