Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொதுத்துறை வங்கி பணியில் சேரவும் இனி கிரெடிட் ஸ்கோர்.. தேர்வர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வங்கிகளில் இனி பணியில் சேருபவர்களுக்கும் கிரெடிட் ஸ்கோர் செக் செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் ராஜ்யசபாவில், மத்திய நிதித்துறை பங்கஜ் சௌத்ரி அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் இவ்வாறு கூறியுள்ளார்.

ராஜ்யசபாவில் அமைச்சர் கூறியதாவது:- பொதுத்துறை வங்கியில் சேருவதற்காக ஐ.பி.பி.எஸ். (IBPS) நடத்தும் பொது ஆட்சேர்ப்பு செயல்முறைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், வங்கியில் பணிக்கு சேரும்போது நல்ல கிரெடிட் ஸ்கோரை பராமரிக்க வேண்டும். அதாவது, வங்கியில் இருந்து கடன் பெறுவதற்கான தகுதியையும் திருப்பி செலுத்தும் திறனையும் பராமரிக்கும் கிரெடிட் ஸ்கோர் நன்றாக இருப்பது அவசியம்.

Credit Score Mandatory for Bank Jobs Centre Says IBPS Candidates May Be Checked Before Appointment

கிரெடிட் ஸ்கோர் வேண்டும்

அவர்கள் குறைந்தபட்சம் எவ்வளவு கிரெடிட் ஸ்கோர் வைத்து இருக்க வேண்டும் என்பது வங்கிகளில் கொள்கைக்கு ஏற்ப மாறுபடும். வங்கி பணிகளுக்கான ஆட்சேர்ப்புத் தேர்வுகளை நடத்தும் ஒரு தேர்வு முகமையாக வங்கிப் பணியாளர் தேர்வு அமைப்பு (IBPS) உள்ளது. எனினும், கிரெடிட் ஸ்கோர் என்பது விண்ணப்பிப்பதற்கான முன்நிபந்தனை அல்ல. வங்கிக் கணக்கு அல்லது இதுவரை கடன் வாங்காத விண்ணப்பதாரர்களுக்கு இந்த விதி பொருந்தாது:" என்று கூறினார்.

குறைந்தபட்சம் எவ்வளவு கடன் புள்ளிகளை வைத்திருக்க வேண்டும் என்பது அந்த வங்கிகளின் கொள்கைக்கு ஏற்ப மாறுபடும். இதில் அவ்வப்போது மாற்றம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி பணிக்கு தயாராகும் தேர்வர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக மத்திய அரசின் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.

பணி ஆணை ரத்து

எனினும், இது தொடர்பாக மத்திய அரசு தரப்பில் கூறுகையில், "வங்கிகளில் பண பரிவர்த்தனைகள், கடன் அளிப்பு நடைமுறை, வாடிக்கையாளர் கணக்குகளை கையாள்வது போன்ற பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் கடன் விவகாரத்தில் பொறுப்பு மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முறை கையாளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கடந்த மூன்று ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் நியமனம் செய்யப்பட்ட 20 பேரின் சிபில்/ கிரெடிட் ஸ்கோர் திருப்தி அளிக்கக்கூடிய வகையில் இல்லாததால், அவர்களின் பணி ஆணை ரத்து அல்லது திரும்ப பெறப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரெடிட் புள்ளிகள் குறையும்

கிரெடிட்/சிபில் ஸ்கோர் என்ற கடன் புள்ளிகளை வங்கிகள், வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கும் போது செக் செய்து கொடுக்கின்றன. வாடிக்கையாளர் இதற்கு முன்பு வாங்கிய வங்கி கடன்களை சரிவர செலுத்தாமலோ தாமதமாக செலுத்தினாலோ கிரெடிட் புள்ளிகள் குறையும். இந்த புள்ளிகள் குறைவாக இருந்தால் அதை ஒரு காரணமாக காட்டி வங்கிகளின் கடன் விண்ணப்பத்தை நிராகரிக்கின்றன.

இந்த நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இல்லை.. இதை கணக்கிடும் நிறுவனம் என்ன மாதிரியான பார்முலாவை பின்பற்றுகிறது என்றே தெரியவில்லை என்பது பொதுமக்களின் பலரின் குற்றச்சாட்டாக உள்ளது. லோக்சபாவில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கூட இந்த விவகாரத்தை முன்வைத்து கேள்வி எழுப்பியிருந்தார்.

வங்கிகளில் கடன்களுக்கு பரிசோதிக்கப்பட்டு வந்த கிரெடிட் ஸ்கோரை பணியில் சேருவதற்கான அளவு கோலாகவும் கொண்டு வருவது தேர்வர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் செயல்முறையாக இருக்கும் என்றும் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+