டிகிரி போதும்.. ரூ.44,900 டூ ரூ.1.51 லட்சம் வரை சம்பளம்.. சிஎஸ்ஐஆர்-ல் அசத்தலான வேலை.. ரெடியா?
சென்னை: மத்திய அரசின் சிஎஸ்ஐஆர் நிறுவனத்தில் காலியாக உள்ள 444 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்வதன் மூலம் குறைந்தபட்சம் ரூ.44,900 முதல் ரூ.1.51 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி பெற்ற அமைப்பாக அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (CSIR or Council of Scietific and Industrial Research) செயல்பட்டு வருகிறது.

இங்கு 2 பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள்: சிஎஸ்ஐஆர் எனும் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலில் காலியாக உள்ள 444 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி செக்சன் ஆபிசர் (Section Officer) பணிக்கு 76 பேர், அசிஸ்டென்ட் செக்சன் ஆபிசர் (Assistant Section Officer) பணிக்கு 368 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வயது வரம்பு: இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் அதிகபட்சமாக 33 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயது வரையும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகள் என்றால் 10 முதல் 15 வரையும் வயது தளர்வு என்பது வழங்கப்படும்.
கைநிறைய சம்பளம்.. பிளஸ் 2 முடித்தவரா நீங்கள்? ஐசிஎஸ்எஸ்ஆர்-ல் அசத்தலான வேலை.. மிஸ் பண்ணாதீங்க
கல்வி தகுதி - சம்பளம்: இந்த பணியை பெற விரும்புவோர் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். செக்சன் ஆபிசர் பணிக்கு மாதம் ரூ.47,600 முதல் ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 100 வரை வழங்கப்படும். அசிஸ்டென்ட் செக்சன் ஆபிசர் பணிக்கு மாதம் ரூ.44,900 முதல் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 400 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜனவரி 12ம் தேதிக்குள் https://www.csir.res.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் கட்டணமாக ரூ.500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படை வீரர்கள், சிஎஸ்ஐஆர் துறை விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் என்பது கிடையாது.
தேர்வு மையம்: இப்படி விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, நேர்க்காணல் முறையில் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழ்நாட்டில் எழுத்து தேர்வுக்கான மையம் சென்னையில் அமைக்கப்பட உள்ளது. மேலும் பல முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் உள்ளன. சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் 79690 49955 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
RRB Group D: இந்தியன் ரயில்வேயில் 22,195 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! 10 ஆம் வகுப்பு தகுதி தான் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
IT JOBS: நாளை மதியம் இண்டர்வியூ.. HCL வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. சென்னையில் பணி -
Codingஐ முழுசா AI செய்துவிட்டால்.. ஐடி ஊழியர்களுக்கு வேலையே இருக்காதா? பிரபல வல்லுநர் தந்த பதில் -
ஐடிஐபி வங்கியில் வேலை.. 1,300 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! மாதம் 50 ஆயிரம் சம்பளம்! -
அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை.. தமிழக அரசு வெளியிட்ட குட்நியூஸ்.. அரசாணையை கவனித்தீர்களா? -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர்












Click it and Unblock the Notifications