ஐடிஐபி வங்கியில் வேலை.. 1,300 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! மாதம் 50 ஆயிரம் சம்பளம்!
சென்னை: நாட்டின் முன்னணி வங்கிகளில் ஒன்றான ஐடிபிஐயில் 1,300 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.
இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்று ஐடிபிஐ. மத்திய அரசின் பொதுத்துறை காப்பீட்டு கழகமான எல்.ஐ.சி இந்த வங்கியில் பெருபான்மையான பங்குகளை வைத்துள்ளது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான வங்கி கிளைகள் உள்ளன.

பணியிடங்கள் விவரம்:
சுமார் 20 ஆயிரம் வங்கி கிளைகளுடன் இந்த வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் காலியாக உள்ள 1,300 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
* ஜூனியர் அஸ்சிஸ்டண்ட் மேனேஜர் (கிரேட் 0 பிராந்தியம்) -1,100
* அசிஸ்டண்ட் மேனேஜர்(கிரேடு ஏ) - 200 என மொத்தம் 1,300 பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருக்க வேண்டும். அசிஸ்டண்ட் மேனேஜர் (கிரேடு ஏ) பணிக்கு வங்கிகள் அல்லது நிதி சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் இருப்பது அவசியம். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
வயது வரம்பை பொறுத்தவரை அசிஸ்டண்ட் மேனேஜர் கிரேடு பணிக்கு 21 வயது முதல் 30 வயது வரையும் ஜூனியர் அசிஸ்டண்ட் மேனஜர் பணிக்கு (ஜேஏஎம்) பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 20 வயது 25 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
தேர்வு முறை:
ஆன்லைன் டெஸ்ட் மற்றும் நேர்முகத் தேர்வு & சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் டெஸ்ட் கணிணி வழியில் நடைபெறும். ஆப்ஜெக்டிவ் முறையில் வினாத்தாள் இடம் பெற்று இருக்கும். 200 வினாத்தாள் இடம் பெற்று இருகும்.
அடுத்தகட்ட தேர்வுக்கு பெற உரிய கட் ஆப் பெறுவது அவசியம். தேர்வர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட் ஆஃப் நிர்ணயிக்கப்படும். நேர்முகத் தேர்வை பொறுத்தவரை பொது அறிவு, வங்கி பற்றிய விவரங்கள் கேட்கப்படும். சான்றிதழ் சரிபார்ப்பில் உரிய கல்வி சான்று, அனுபவம் சான்று ஆகியவை பெற்று இருக்க வேண்டும்.
சம்பளம்:
* ஆண்டுக்கு ரூ.6.14 லட்சம் முதல் 6.50 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.
* உதவி மேலாளர் பணிக்கு மாதம் ரூ.36 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.
-
ஆயிரக்கணக்கான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் ஆரக்கிள்! எல்லாத்துக்கும் இந்த AI தான் காரணம்! -
சென்னையில் ரூ.33 ஆயிரம் சம்பளத்தில் வேலை.. செம சான்ஸ்! யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்? -
IT Jobs: அனுபவம் தேவையில்லை.. டிகிரி முடித்தோருக்கு அடித்த ஜாக்பாட்.. சென்னையிலேயே ஐடி வேலை ரெடி -
HCL IT JOBS: நாளை சென்னையில் இண்டர்வியூ.. அழைக்கும் எச்சிஎல்.. சூப்பர் சான்ஸ் -
"அப்படியே ஓடிடுங்க.." தங்கம் அவுட், கேஷ் இன்.! ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர் இதுதான் -
ஆரோவில் நிலம் 350 கோடி.. ஆளுநர் ஆர்.என்.ரவி, பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது பறந்த புகார்.. முழு விவரம் -
2025க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் வருமா? பென்சன் வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம்














Click it and Unblock the Notifications