காலையில் கணினியை திறந்தவர்களுக்கு.. அசத்தலான மெயில்.. பல லட்சம் ஊழியர்களுக்கு இன்போசிஸ் சர்ப்ரைஸ்
பெங்களூர்: இன்ஃபோசிஸ் நிறுவனம் செப்டம்பர் காலாண்டுக்கான போனஸ் தொகையை அதன் ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது. பல்வேறு பணி நிலைகளில் உள்ள ஊழியர்களுக்கு இதற்கான கடிதங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
இன்ஃபோசிஸ் நிறுவனம் சராசரியாக 75% போனஸை வழங்கியுள்ளது. சில ஊழியர்கள் 83% வரை போனஸ் பெற்றதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில், இந்த செப்டம்பர் காலாண்டு போனஸ் சற்று குறைவாக இருப்பதாக ஊழியர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, நான்காம் நிலை பணியாளர் ஒருவர், "சிறந்த செயல்பாடு" கொண்டவர்களுக்கு 83%, "பாராட்டுக்குரிய செயல்பாடு" கொண்டவர்களுக்கு 78.5% மற்றும் "எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தவர்களுக்கு" 75% போனஸ் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வளவு போனஸ் இன்ஃபோசிஸ்
ஒவ்வொரு பணி நிலைக்கும் போனஸ் சதவீதம் குறைந்தாலும், ஒட்டுமொத்தமாக தகுதியான அனைத்துப் பிரிவுகளுக்கும் சராசரி போனஸ் 70.5% முதல் 83% வரை இருந்தது. கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் சராசரியாக 80% போனஸ் வழங்கப்பட்டது (75% முதல் 89% வரை), இதை ஒப்பிடுகையில் தற்போதைய போனஸ் 7-8% குறைவாக இருப்பதாக சில ஊழியர்கள் கருதுகின்றனர்.
நான்காம், ஐந்தாம் மற்றும் ஆறாம் நிலை ஊழியர்களுக்கும் போனஸ் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் மென்பொருள் பொறியாளர்கள், குழுத் தலைவர்கள் மற்றும் மூத்த மேலாளர்கள் அடங்குவர். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 3.23 லட்சம் ஊழியர்களில் இவர்களே பெரும்பான்மையானவர்கள்.
இந்த போனஸ் "சிறந்த செயல்பாடு", "பாராட்டுக்குரிய செயல்பாடு", மற்றும் "எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தவர்கள்" போன்ற முக்கிய செயல்திறன் அடிப்படையிலான பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டது. அனைத்து பிரிவுகளுக்கும் போனஸ் கிடைத்தாலும், அவற்றின் சதவீதம் வேறுபட்டது.
ஊழியர்களின் சம்பள கட்டமைப்பில் மாற்றம்?
ஊழியர்களின் சம்பள கட்டமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வருடாந்திர காலாண்டு மாறக்கூடிய ஊதியத்தின் சதவீதமே இந்த போனஸ். உதாரணமாக, ஒரு ஊழியரின் ஆண்டு மாறக்கூடிய ஊதியம் ஒரு லட்சம் ரூபாய் எனில், காலாண்டுக்கு 25,000 ரூபாய். இதில் 75% போனஸ் என்றால், அந்த ஊழியர் காலாண்டுக்கு 18,750 ரூபாய் பெறுவார்.
இந்த போனஸ் தொகை நவம்பர் மாதத்தில் ஊழியர்களின் சம்பளக் கணக்கில் செலுத்தப்படும் என இன்ஃபோசிஸ் திட்டமிட்டுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. பொதுவாக, ஒவ்வொரு காலாண்டின் இரண்டாவது மாதத்தில் போனஸ் வழங்கப்படுவது வழக்கம்.
இன்போசிஸ் பின்னணி
பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த மென்பொருள் நிறுவனத்தில் சுமார் 3,23,000 ஊழியர்கள் உள்ளனர். செப்டம்பர் 2023 முதல் அக்டோபர் 2024 வரையிலான மதிப்பீட்டுக் காலத்திற்கான முந்தைய சம்பள உயர்வு, தகுதியான ஊழியர்களுக்கு டிசம்பர் 2024-இல் வழங்கப்பட்டது.
இன்போசிஸ் அதன் இரண்டாம் காலாண்டு நிதி முடிவுகளை அக்டோபர் 16, வியாழக்கிழமை அன்று அறிவிக்க உள்ளது. இதற்கிடையில், டிசிஎஸ் நிறுவனத்திலும் செயல்திறன் மதிப்பீடு நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு ஊழியர்கள் A, B, C, D என மதிப்பிடப்படுகிறார்கள், A என்பது மிக உயர்ந்த மதிப்பெண்.
இன்போசிஸ் புதிய முறை
வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கிடையே சரியான சமநிலையை உறுதி செய்யும் நோக்கில், இன்ஃபோசிஸ் நிறுவனம் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதன்படி, ஒரு நாளைக்கு 9.15 மணி நேரத்திற்கு மேல் பணிபுரியும் ஊழியர்களுக்கு, அவர்களின் வேலை நேரம் நிறைவடைந்ததை நினைவூட்டும் விதமாக எச்சரிக்கை மின்னஞ்சல் அனுப்பப்படும்.
இதுகுறித்து இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மனித வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், "ஆரோக்கியமான வேலை-வாழ்க்கை சமநிலையைப் பராமரிப்பது ஊழியர்களின் நல்வாழ்வு மற்றும் நீண்டகால தொழில்முறை வெற்றிக்கு மிக முக்கியமானது" என்று மின்னஞ்சல்கள் மூலம் ஊழியர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ், ஊழியர்களின் பணி நேரத்தில் கடுமையாக கவனம் செலுத்துகிறது. ஊழியர்கள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட அதிகமாக வேலை செய்தால், அவர்களுக்கு எச்சரிக்கை மெயில்களை அனுப்பும் புதிய முறையை அறிமுகப்படுத்தி உள்ளனர். இத்தகைய நடவடிக்கை, நிறுவனர் நாராயண மூர்த்தி, வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று கூறிய கருத்துக்கு முரணாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications