Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னாது ஆடுகள் -கோழிகள் வளர்க்க ரூ.25 லட்சம் வரை மானியமா? நம்ம முடியலையா! முதலில் இதை முழுசா படிங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: செம்மறி ஆடு, கோழி வளர்ப்புக்காக ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்கும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது அரசு.

படித்தும் வேலை கிடைக்கவில்லையே என்ற கவலையை இந்த நொடியோடு தூக்கி ஓரங்கட்டிவிட்டு, கால்நடை வளர்ப்பின் மூலம் நீங்களும் தொழில் முனைவோர் ஆகலாம்.

அரசு அறிவித்துள்ள திட்டத்தின் விவரமும் அதன் நடைமுறையும் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.

மத்திய அரசின் திட்டம்

மத்திய அரசின் திட்டம்

ஒன்றிய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறையின் மூலமாக செயல்படுத்தப்படும் தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் 2021-22ம் ஆண்டு முதல் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

திட்டத்தின் நோக்கம்

திட்டத்தின் நோக்கம்

இத்திட்டத்தின் நோக்கமானது, புறக்கடை கோழி வளர்ப்பு, செம்மறியாடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு, பன்றி வளர்ப்பு, தீவனம் மற்றும் தீவனபயிர் சேமிப்பு மற்றும் மேம்படுத்துதல், செம்மறியாடு மற்றும் வெள்ளாட்டினத்தை மேம்படுத்துதல் மற்றும் தீவன உற்பத்தி ஆகிய பணிகளை மேற்கொள்ள தொழில் முனைவோரை உருவாக்குதலாகும்.

கோழி வளர்க்க

கோழி வளர்க்க

இத்திட்டத்தின் கீழ் கோழி வளர்க்க முனைவோர் 1000 நாட்டு கோழிகள் கொண்ட பண்ணை அமைத்து, முட்டை உற்பத்தி செய்து, கோழி குஞ்சு பொரிப்பகம் வழி கோழிக்குஞ்சுகள் உற்பத்தி செய்து நான்கு வார வயது வரை வளர்த்து விற்க மொத்த திட்ட செலவில், மூலதனத்தில் 50% மானியம் - அதிகபட்சமாக ரூ. 25 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

செம்மறி ஆடுகள்

செம்மறி ஆடுகள்

ஆடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வளர்க்க முனைவோருக்கு 500 பெண் ஆடுகள் + 25 கிடா கொண்ட அலகுகள் அமைக்க மொத்த திட்ட செலவில், மூலதனத்தில் 50% மானியம் - அதிகபட்சமாக ரூ. 50 லட்சம் வரை மானியம் இரண்டு தவணைகளில் வழங்கப்படும்.பன்றி பண்ணை அமைக்க முனைவோருக்கு 100 பெண் பன்றிகள் + 25 ஆண் பன்றிகள் கொண்ட அலகுகள் அமைக்க மொத்த திட்ட செலவில், மூலதனத்தில் 50% மானியம் - அதிகபட்சமாக ரூ. 30 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

யார் பயன்பெறலாம்

யார் பயன்பெறலாம்

இத்திட்டத்தின் கீழ் தனி நபர், சுய உதவி குழுக்கள்(SHG), விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்பு(FPO), விவசாய கூட்டுறவுகள், கூட்டு பொறுப்பு சங்கங்கள் (JLG), பிரிவு 8 நிறுவனங்கள் ஆகியவை தகுதியானவர்கள் ஆவர். முனைவோர் சொந்தமாக அல்லது குத்தகைக்கு எடுக்கப்பட்ட நிலம் வைத்திருக்க வேண்டும். தொழில்முனைவோர்/தகுதியுள்ள நிறுவனங்கள் திட்டத்திற்கான வங்கி கடன் அனுமதி அல்லது வங்கி உத்தரவாதத்தை பெற வேண்டும், திட்ட மதிப்பீட்டிற்கான அங்கீகாரத்தினையும் பெற வேண்டும்.

விண்ணப்பங்கள் வரவேற்பு

விண்ணப்பங்கள் வரவேற்பு

பயன் பெற விரும்புவோர் https://nlm.udyamimitra.in/ என்கிற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இணையதளம் வாயிலாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் இத்திட்டத்தை மாநில அளவில் செயல் படுத்தும் நிறுவனமான தமிழ் நாடு கால்நடை மேம்பாட்டு முகமையின் திட்ட மதிப்பீட்டு குழுவால் பரிசீலிக்கப்பட்டு திட்ட வழிகாட்டுதலின் படி உள்ளவற்றை கடன் வசதி பெற வங்கிக்கு அனுப்பப்படும். பின்னர் ஒன்றிய அரசின் அங்கீகாரம் பெற அனுப்பப்படும். பணிகள் நிறைவு பெறுவதன் அடிப்படையில் மானியம் இரு தவணைகளில் வழங்கப்படும். திட்டம் தொடர்பான முழுமையான தகவல்கள் கீழ் கண்ட இணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

இணையதளம் விவரம்

இணையதளம் விவரம்

https://nlm.udyamimitra.in/; http://www.tenders.tn.gov.in/innerpage.asp?choice=tc5&tid=tnl202901&work=1 &http://www.tenders.tn.gov.in/innerpage.asp?choice=tc5&tid=tnl202901&work=1& https://dahd.nic.in/sites/default/filess/NLM%20Guidelines%20Final%20approved%20by%20EC%20.pdf மேலும் விவரங்கள் அறிய அருகில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள், பல்கலைக்கழக அலுவலர்கள் மற்றும் சென்னை, தமிழ் நாடு கால்நடை மேம்பாட்டு முகமை அலுவலர்களை தொடர்பு கொள்ளவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+