IT JOBS: சென்னை உள்பட 4 இடங்களில் பணி.. எம்பிஏ படித்தோருக்கு ஜாக்பாட்.. அழைக்கும் TCS
சென்னை: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் பிசினஸ் அனலிஸ்ட் பணிக்கு சென்னை மற்றும் பெங்களூரில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த ணிக்கு உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். அதன்பிறகு இண்டர்வியூவில் பங்கேற்று வேலையை பெறலாம்.
டாடா குழுமத்தை சேர்ந்த ஐடி நிறுவனம் தான் டிசிஎஸ். நம் நாட்டின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தற்போதைய அறிவிப்பில் பிசினஸ் அனலிஸ்ட் (Business Analyst) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம்செய்வோர் எம்பிஏ படிப்பை டயர் 1 கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் படித்திருக்க வேண்டும்.
அதேபோல் என்டர்பிரைஸ் பிளாட்பார்ம்ஸ், பிசினஸ் ஆபரேஷன்கள் மற்றும் ஐடி சிஸ்டம்கள் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.செகன்டரி ரீசர்ஸ், அனலிட்டிக்கல், கன்சல்டிங், பிரச்சனைகளை தீர்க்குமு் திறன், டேட்டா டிரைவன் டிசிசன் மேக்கர் உள்ளிட்ட திறமை இருக்க வேண்டும். அதேபோல் ஸ்டாக்ஹோல்டர் மேனேஜ்மென்ட், கஸ்டமர் பேசிங், நல்ல கம்யூனிகேஷன் திறமை இருக்க வேண்டும்.
அதேபோல் கஸ்டமர்களிடம் கான்செப்ட் பற்றிய கிளியராக புரிந்து கொண்டு பதிலளிக்கும் திறமை இருக்க வேண்டும். எந்த இடத்தில் பணியாற்ற வேண்டி இருந்தாலும் இடமாற தயாராக இருக்க வேண்டும். எம்எஸ்ஆபிஸில் எக்ஸல், பவர்பாயிண்ட் உள்பட பிற விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 5 ஆண்டு முதல் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில்பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.
அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் குறிப்பிடப்படவில்லை. எனவே எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம் எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
இப்படி விண்ணப்பம் செய்வோர் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கான தேதி, நேரம் குறித்து அழைக்கப்படுவார்கள். பணிக்கு தேர்வாகும் நபர்கள் 4 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதன்படி சென்னை, மும்பை, டெல்லி, என்சிஆர் ஆகிய இடங்களில் உள்ள டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications