தேதி முடிய போகுது! இந்திய விமான நிலைய ஆணையத்தில் சூப்பர் வேலை.. 119 பணியிடங்கள்.. மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை: இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள 119 ஜூனியர் அசிஸ்டண்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 2 நாட்களே இருக்கிறதால், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (AAI) என அழைக்கப்படும் இந்திய விமான நிலைய ஆணையம், மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. விமான நிலையங்களின் நிர்வாகம் உள்ளிட்ட பணிகளை இந்த ஆணையம் தான் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில்தான் விமான நிலைய ஆணையங்களில் காலியாக உள்ள 119 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்...

பணியிடங்கள் விவரம்:
ஜூனியர் அஸ்சிஸ்டண்ட் (Fire Service)-73 பணியிடங்கள்
ஜூனியர் அஸ்சிஸ்டண்ட் (Office) -25
ஜூனியர் அஸ்சிஸ்டண்ட் (Electronics)-25
ஜூனியர் அஸ்சிஸ்டண்ட் (Accounts)-19
ஆகிய 119 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
கல்வி தகுதி: ஜூனியர் அஸ்சிஸ்டண்ட் (Office) பணியிடத்திற்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்து இருந்தால் போதும். அக்கவுண்ட்ஸ் பணிக்கு பி.காம் பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும். Fire Service பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் டிப்ளமோ இன் மெக்கானிக்கல்/ஆட்டோ மொபைல்/ Fire ஆகியவை முடித்து இருக்க வேண்டும். அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் அவசியம். கல்வி தகுதி குறித்த தெளிவான விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு: 18 வயது முதல் 30 வயதுடையோர் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு உண்டு.
சம்பளம்: சம்பளத்தை பொறுத்தவரை 31 ஆயிரம் முதல் 1.10 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். பணியிடங்களுக்கு ஏற்ப மாறுபடும்.
தேர்வு முறை: தேர்வு முறையை பொறுத்தவரை எழுத்துத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் அடுத்த கட்டத்திற்கு தேர்வு செய்யப்படுவார்கள். கணிணி வழியில் தேர்வு நடைபெறும். தேர்வு மையங்களை பொறுத்தவரை சென்னை, மதுரை, பெல்காம், பெங்களூர், கலிகட், கொச்சின், ஐதராபாத், விஜயவாடா ஆகிய நகரங்களில் நடைபெறும்.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள்தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, லட்சத்தீவுகள் ஆகிய இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள். தேர்வு அறிவிப்பை தெரிந்து கொள்ள https://www.aai.aero/en/recruitment/release/396317 இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிப்பது எப்படி?: ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். வரும் 27.12.2023 அன்று முதல் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 26.01.2024 ஆகும். விண்ணப்பிக்க 2 நாட்களே இருக்கிறதால், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
-
உத்தரப் பிரதேசத்தில் கொழுந்துவிட்டு எரியும் தீ! சம்பள பிரச்சனையில் தொழிலாளர்கள் ஆவேசம்! -
IT Jobs: 7 பிரிவுகளில் காலியிடங்கள்.. டிசிஎஸ் தரும் சூப்பர் சான்ஸ்.. ஏப்ரல் 18-ல் இண்டர்வியூ -
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. இன்னும் 2 நாட்கள் தான் இருக்கு! உடனே விண்ணப்பிங்க -
நிலக்கரி நிறுவனத்தில் 1,055 காலியிடங்கள்.. 47 ஆயிரம் சம்பளம்! மத்திய அரசு கம்பெனிங்க.. விட்றாதீங்க -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க












Click it and Unblock the Notifications