Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிகிரி எல்லாம் தேவையில்லை.. 8ஆம் கிளாஸ் படித்திருந்தாலே போதும்! 15 ஆயிரத்திற்கு மேல் ஊதியத்தில் வேலை

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூர் மாவட்டத்தில் நுகர்வோர் குறைதீர் ஆணைய அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.

இன்று படித்துவிட்டு நிறைய இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்கிறார்கள். சிலர் தங்களுக்கு தகுந்த வேலை கிடைக்க வேண்டி காத்திருக்கிறார்கள். சிலர் கிடைத்த வேலையை செய்கிறார்கள். இன்னும் சிலர் சுய வேலைவாய்ப்புகளில் ஈடுபடுகிறார்கள்.

 Jobs in Karur district consumer commissioner office for one vacant post

அரசும் தேர்வாணையம் மூலம் வேலைவாய்ப்புகளை கொடுப்பது மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பு முகாம்களை நடத்துகிறது. இது போல் வேலைவாய்ப்புகளை விளம்பரப்படுத்தியும் வருகிறது. இதை இளைஞர்கள் பார்த்து விண்ணப்பித்து தகுதி இருந்தாலே வேலை கிடைத்தும்.

அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் நுகர்வோர் குறைதீர் ஆணைய அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பதவி காலியாக உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவிக்கு ஒரே ஒரு காலியிடம் உள்ளது.

இந்த பதவிக்கு இன சுழற்சி அடிப்படையில் தற்போது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் சீர்மரபினர் மட்டுமே விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

வயது வரம்பு- ஜூலை 1 ஆம் தேதி அன்று 18 வயது முதல் 37 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த பணிக்கான ஊதிய விகிதம் ரூ 15, 700 ஆகும். இத்துடன் அகவிலைப்படி, வீட்டு வாடகை படி உள்ளிட்டவையும் வழங்கப்படும். விண்ணப்பங்களை சுயவிலாசமிட்ட ரூ 50 க்கான ஸ்டாம்ப் ஒட்டி பதிவு தபால் மூலம் இன்று மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்,

 Jobs in Karur district consumer commissioner office for one vacant post

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், 107/1, நவலடியாள் காம்பளக்ஸ் முதல் தளம், அண்ணா நகர், தான்தோன்றிமலை, கரூர்- 639 005.

Self attested செய்து தேவையான ஆவணங்களின் நகல்களை மட்டும் விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பி வைக்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் அசல் ஆவணங்களை அனுப்பக் கூடாது. நேர்முகத் தேர்வு குறித்து தபால் வழியாகவோ தொலைபேசி வாயிலாகவோ, ஈமெயில், வாட்ஸ் ஆப் மூலமாகவே தெரிவிக்கப்படும். இன்றுதான் கடைசி தேதி, சீக்கிரம் அப்ளை செய்ங்க. டிகிரி, டபுள் டிகிரியெல்லாம் தேவையில்லை, 8ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+