ரூ 85 ஆயிரத்தில் சூப்பரான வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க.. கடைசி நாள் ஆகஸ்ட் 18
சென்னை: ரூ 85 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தில் காலிப்பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பிக்க வரும் 18 ஆம் தேதி கடைசி நாள்.
நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையம் என்பது தொற்று நோய்களுக்கான தேசிய நிறுவனம் என அழைக்கப்பட்டது. இந்த மையம் இந்திய சுகாதார சேவைகள் இயக்குநரகம், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு நிறுவனம் ஆகும்.

இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள கன்சல்டன்ட் எபிடீமியோலாஜிஸ்ட், மைக்ரோ பயாலாஜிஸ்ட், வெட்ரினரி, நிதி, கொள்முதல், நிர்வாகம், கணக்கு அலுவலர் உள்ளிட்ட 8 பணிக்கான இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக விண்ணப்பிப்போர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். இதற்கு அதிகபட்ச வயது 60 ஆகும். அரசு அல்லது மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் எம்பிபிஎஸ் அல்லது எம்டி அல்லது டிஎன்பி அல்லது மாஸ்டர் டிகிரி இவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் ரூ 49, 500 முதல்ரூ 85 ஆயிரம் வரை மாத ஊதியம் கிடைக்கும். இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 18 ஆகும்.












Click it and Unblock the Notifications