சென்னை புழல் சிறையில் புதிய வேலைவாய்ப்பு... மிஸ் பண்ணாதீங்க
சென்னை: புழல் மத்தியச் சிறையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னையை அடுத்துள்ள புழல் மத்திய சிறையில் காலியாக உள்ள தொழிற் பணியிடங்களான மின் கம்பியாளர்(Wire man) பணியிடத்திற்கான விருப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி: 8ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றியிருந்தால் போதும். குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் மின் செயல்பாடு மற்றும் பராமரிப்பில் அனுபவம் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் சம்பந்தப்பட்ட மின் பராமரிப்பு பணிகளில் அனுபவம் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை தொழில்நுட்ப பள்ளி அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் வயர்மேன் சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட அனுபவ காலம் இரண்டு ஆண்டுகளாகக் குறைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
D.G.E. & T.Diploma in Trade of Lineman and wireman or National Trade Certificate in the Trade of Wire man கல்வித் தகுதி கொண்டவர்கள் ஒரு ஆண்டு அனுபவம் கொண்டிருந்தாலே போதும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிக்கு மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.57,900 வரை அளிக்கப்படும்.
வயது வரம்பு: பொதுப் பிரிவினர் அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அதேபோல பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் தங்கள் விண்ணப்பங்களை வரும் ஜனவரி 18ஆம் தேதிக்குள் - "சிறைக்கண்காணிப்பாளர், மத்திய சிறை-1, (தண்டனை) புழல், சென்னை 66" என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். ஜனவரி 18 மாலை ஐந்து மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கூடுதல் விவரங்களை https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2021/01/2021010674.pdf இல் தெரிந்து கொள்ளலாம்.