ரெடியா? மாதஊதியம் ரூ.50,000 டூ ரூ.2.80 லட்சம்.. நெய்வேலி என்எல்சியில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள நெய்வேலி என்எல்சியில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.2.80 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறையின் கட்டுப்பாட்டின் ‛நவ்ரத்னா' நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் கீழ் தமிழ்நாட்டில் உள்ள கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் நெய்வேலியில் அமைந்துள்ள என்எல்சியில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

காலியிடங்கள்: என்எல்சியில் எக்சிக்யூட்டிவ் என்ஜினீயர் பணிக்கு 234, துணை பொது மேலாளர் பணிக்கு 30, உதவி எக்சிக்யூட்டிவ் என்ஜினீயர் பணிக்கு 6 பேர், மேலாளர் பணிக்கு 13 பேர், பொது லோலளர் பணிக்கு 11 பேர், கூடுதல் தலைமை மேலாளர் பணிக்கு 3 பேர், துணை பொது மேலாளர் பணிக்கு 8 பேர் என மொத்தம் 308 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வி தகுதி: இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன், கெமிக்கல் உள்பட ஏதேனும் ஒரு பிரிவில் என்ஜினீயரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் எம்பிஏ, எம்எஸ்சி கெமிஸ்ட்ரி, கெமிஸ்ட்ரி சார்ந்த உட்பிரிவு படிப்புகளையும் படித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் சிஏ, ஐசிடபிள்யூஏ உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
வயது வரம்பு: பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் 30 வயதில் இருந்து அதிகபட்சமாக 54 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும் தளர்வு வழங்கப்படும். இதில் வயது வரம்பு என்பது 54 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள பணிக்கு மட்டும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 3 வயது வரை தளர்வு உண்டு. விண்ணப்பம் செய்வோரின் வயது என்பது 2023 ஜூன் மாதம் 1ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
மாத சம்பளம் என்ன: பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.50 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.2.80 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.nlcindia.in இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் ஜூலை மாதம் 5ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 8 ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம்.
எழுத்து தேர்வு இல்லை: இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். இதன்மூலம் எழுத்து தேர்வு இல்லை என்பது உறுதியாகி உள்ளது. மேலும் பணிக்கான விண்ணப்ப கட்டணமாக ரூ.854 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூபிடி, ஓய்வு படை வீரர்களுக்கான விண்ணப்ப கட்டணம் ரூ.354 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications