பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை.. 750 பணியிடங்கள்.. மாதம் 86,000 சம்பளம்! டிகிரி + தமிழ் மொழி அவசியம்
சென்னை: பஞ்சாப் நேஷனல் வங்கியில் லோக்கல் பேங்க் ஆபிசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. டிகிரி முடித்தவர்கள் மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணபிக்க முடியும். சம்பளத்தை பொறுத்தவரை குறைந்தது மாதம் ரூ.48 ஆயிரம் முதல் 86 ஆயிரம் வரை வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்னும் 3 நாட்களே உள்ளன.
நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்று பஞ்சாப் நேஷனல் வங்கி. டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த வங்கிக்கு நாடு முழுவதும் வங்கி கிளைகள் உள்ளன. இந்த வங்கியில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை
பொதுத்துறை வங்கி என்பதால் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கை நிறைய சம்பளம், சலுகைகள் உள்ளிட்டவைகள் கிடைக்கின்றன. இதனால் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை பார்க்க வேண்டும் என்பது தேர்வர்களின் கனவுகளில் ஒன்றாக உள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் உள்ள காலிப்பணியிடங்கள் ஐபிபிஎஸ் வழியாக மட்டுமின்றி நேரடியாக வங்கியே அறிவிப்பு வெளியிட்டு பணியிடங்களை நிரப்பி வருகிறது.
அந்த வகையில், பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள லோக்கல் பேங்க் ஆபிசர் எனப்படும் உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
* லோக்கல் பேங்க் ஆபிசர்: 750
மாநில வாரியாக பணியிடங்கள்:
தமிழ்நாடு - 85
ஆந்திரப் பிரதேசம் - 05
குஜராத் - 95
கர்நாடகா - 85
மகாராஷ்டிரா - 135
தெலங்கானா - 88
மேற்குவங்கம் - 90
ஜம்மு & காஷ்மீர் - 20
லடாக் - 03
அருணாசலப் பிரதேசம் - 05
அஸாம் - 86
மணிப்பூர் - 08
மேகாலயா - 08
மிசோரம் - 05
நாகாலாந்து - 05
சிக்கிம் - 05
திரிபுரா - 22 என மொத்தம்: 750 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடத்தில் டிகிரி முடித்திருக்க வேண்டும். அது போக ரிசர்வ் வங்கி (RBI) சட்டம், 1934 இன் இரண்டாம் அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள வணிக வங்கி அல்லது பிராந்திய கிராமப்புற வங்கியில் கிளார்க் /அலுவலர் பிரிவில் குறைந்தபட்சம் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழியில் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும். அதாவது, தமிழ்நாட்டில் உள்ள 85 பணியிடங்களுக்கும் தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
வயது வரம்பு:
குறைந்தபட்சம் 20 வயது பூர்த்தியானவர்களும் 30 வயதுக்கு மிகாதவர்களும் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?
உள்ளூர் வங்கி அதிகாரி (LBO) பதவிக்கு மாதம் ரூ.48,480/- முதல் ரூ.85,920/- வரை ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு முறை:
தேர்வு முறையானது ஆன்லைன் எழுத்துத் தேர்வு, உள்ளூர் மொழித் திறன் தேர்வு (LLPT) மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், நாகர்கோவில் /கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் ஆகிய நகரங்களில் அமைக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
ST/SC/முன்னாள் ராணுவத்தினர்/PWD விண்ணப்பதாரர்களுக்கு ரூ.590/-. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ.1180/-. கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும்.
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பஞ்சாப் நேஷனல் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://pnb.bank.in/) ஆன்லைன் படிவத்தை நிரப்ப வேண்டும். விண்ணப்பிக்க வரும் 23 ஆம் தேதி கடைசி நாளாகும். இன்னும் 3 நாட்களே இருப்பதால் உடனே விண்ணப்பித்து கொள்ளவும்.
தேர்வு நடைபெறும் தேதி: டிசம்பர் 2025 அல்லது ஜனவரி 2026. தேர்வர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை படித்து உறுதி செய்த பிறகு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தேர்வு அறிவிப்பை படிக்க: Click Here












Click it and Unblock the Notifications