கோவை, மதுரை, தூத்துக்குடியில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்கள்.. நேரடி நியமனம்.. டிகிரி தகுதி தான்
சென்னை: கோவை, மதுரை, தூத்துக்குடி என தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 122 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்த விவரங்களை இங்கு பார்க்கலாம்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோவை (28 பணியிடங்கள்), மதுரை (15), தூத்துக்குடி (23) திருச்சி, (06), திண்டுக்கல் (14),சேலம் (13), விருதுநகர் (23) என 122 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
மாவட்ட வாரியாகவும் பிரித்து காலியிடங்கள் உள்ளன. உதாரணமாக தூத்துக்குடி மாவட்டத்தை எடுத்துகொண்டால் ஆழ்வார் திருநகரி-02, கருங்குளம் -03, ஸ்ரீவகுண்டம் -03, சாத்தான்குளம் -03, உடன்குடி 02, கயத்தார்- 02, கோவில்பட்டி -03, ஒட்டப்பிடாரம் 01, புதூர் 02, விளாத்திகுளம் -02 என 23 காலியிடங்கள் தூத்துக்குடியில் உள்ளன.
கல்வித் தகுதியை பொறுத்தவரை இந்த பணியிடங்களுக்கு இளங்கலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கணினி எம்.எஸ்.ஆபிஸ் குறைந்தபட்சம் 3 மாதம் சான்றிதழ் பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். கணினி மென்பொருள் சார்ந்த கல்வி தகுதி பெற்றவருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இருசக்கர வாகன உரிமம் பெற்று இருக்க வேண்டும்.
5 ஆண்டு அனுபவம்
முன் அனுபவத்தை பொறுத்தவரை மக்கள் அமைப்பு சார்ந்த திட்டங்களில் குறைந்தபட்சம் 5 ஆண்டு அனுபவம் பெற்று இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். கல்வித் தகுதி, இருப்பிடம், சாதிச் சான்று, நன்னடத்தை சான்று, கணினி பயிற்சி பெற்றதற்கான சான்று மற்றும் முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
தகுதியுள்ள விண்ணப்பதாரருக்கு தேர்வு/ நேர்காணல் நடைபெறும். நியமனத்தை ரத்து செய்யும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு உண்டு. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் இணை திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை இயக்குநர்/ திட்ட இயக்குநர் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், இரண்டாவது தளம், கோரம்பள்ளம்- 262101 தூத்துக்குடி மாவட்டம் - என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாக 16.02 2026 மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள பணியிடங்கள், விண்ணப்பிக்க வேண்டிய முகவரி உள்ளிட்டவற்றை அந்தந்த மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications