SSC Job: 737 கான்ஸ்டபிள் பணியிடங்கள்.. டிரைவிங் லைசன்ஸ் இருக்கா? எஸ்எஸ்சி வெளியிட்ட சூப்பர் சான்ஸ்
சென்னை: மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் (எஸ்.எஸ்.சி) 737 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். சம்பளத்தை பொறுத்தவரை தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.69 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்ற விவரங்களை இங்கு காணலாம்.
மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையமான எஸ்.எஸ்.சி மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பணியை மேற்கொண்டு வருகிறது. மத்திய உள்துறை அமைச்சக கட்டுப்பாட்டில் வரும் காவல்துறை பிரிவு பணியிடங்களும் எஸ்.எஸ்.சி வாயிலாகவே நிரப்பப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கான்ஸ்டபிள் (டிரைவர்) பணியிடங்களை நிர்ப்புவதற்கான அறிவிப்பினை எஸ்.எஸ்.சி வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு என்ன என்பன உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
* கான்ஸ்டபிள் (ஓட்டுநர் - ஆண்) - 654
* கான்ஸ்டபிள் (ஓட்டுநர்) முன்னாள் ராணுவத்தினர் - 83
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் ஹெவி வாகனங்கள் ஓட்டுவதற்கு உரிய லைசன்ஸ் வைத்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
01.07.2025 தேதியின்படி, 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது, 02.07.1995 க்கு முன்பாகவோ 01.07.2004 பிறகோ பிறந்தவராக இருத்தல் கூடாது. எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு வயது உச்ச வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு உண்டு. ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும். முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிகளின் படி சலுகைகள் வழங்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?
தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு 7-வது ஊதிய கமிஷன் பே லெவல் 3-ன் படி சம்பளம் வழங்கப்படும். அதாவது, மாதம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை கணினி வழியிலான ஆன்லைன் தேர்வு, உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வுக்கட்டணம்
தேர்வு மையங்களை பொறுத்தவரை நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, வேலூர், புதுவை ஆகிய நகரங்களில் தேர்வு நடைபெறும். விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.
* விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கிய நாள்: 24.09.2025 ஆகும்.
* விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.10.2025 at 11.00 PM ஆகும்.
* தேர்வு நடைபெறும் மாதம்: டிசம்பர் 2025/ ஜனவரி 2026 ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_DPCD_2025.pdf
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications