தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும்! ரூ.39,900 சம்பளம்.. அறநிலையத்துறை வெளியிட்ட அறிவிப்பு
சென்னை: அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயிலில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். சம்பளத்தை பொறுத்தவரை மாதம் 40 ஆயிரம் வரை வழங்கப்படும்.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயிலில் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோவை மாவட்டம் அவினாசி சாலையில் உள்ள இந்த கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் ஒன்றாக உள்ளது.

அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில் என்பதால், இந்த கோயிலில் பணிபுரிவர்களுக்கு கை நிறைய சம்பளம்,சலுகைகள் உள்ளிட்டவை கிடைக்கின்றன. இதனால், அறநிலையத்துறை வேலைக்கு தேர்வர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில்தான் தற்போது கோயிலில் காலியாக இருக்க கூடிய இரண்டு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
ஓதுவார்: 01
இரவுக்காவலர்; 01
என மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி
கல்வித்தகுதியை பொறுத்தவரை தமிழில் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும். ஓதுவார் பணிக்கு சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு நிறுவனங்கள் நடத்தும் மூன்றாண்டு பாடப்பிரிவை முடித்ததற்கான தேவாரப்பள்ளி வழங்குகின்ற சான்றிதழை பெற்று இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 01.07.2025 தேதிப்படி 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
சம்பளம் எவ்வளவு?
சம்பளத்தை பொறுத்தவரை ஓதுவார் பணிக்கு மாதம் ரூ.12,600- 39,900 வரை வழங்கப்படும். இரவுக்காவலர் பணிக்கு ரூ.11,600- ரூ.36,800 வரை வழங்கப்படும்.
தேர்வர்கள் தேர்வு அறிவிப்பினை படித்து உறுதி செய்து கொண்ட பிறகு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 24.01.2026 கடைசி நாளாகும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்ப படிவம் கோயில் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php
-
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
அதிகாலை 6 மணிக்கு மெயில்! 12,000 இந்திய ஊழியர்கள் பணி நீக்கம்! ஷாக் கொடுத்த ஐடி நிறுவனம் -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள்












Click it and Unblock the Notifications