தமிழ்நாட்டில் பால் விலை உயர்வு! நாளை முதல் அமலுக்கு வருகிறது புதிய விலை!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் நாளை முதல் பால் அரை லிட்டருக்கு ரூ.2 ஒரு லிட்டருக்கு ரூ.3 என விலை உயர்த்தப்படும் என தனியார் பால் நிறுவனமான ஆரோக்யா அறிவித்திருக்கிறது.
இந்த திடீர் விலை உயர்வு காரணமாக மக்கள் அதிருப்பதியடைந்திருக்கின்றனர். ஏற்கெனவே தமிழகம் முழுவதுமான தேவைக்கு ஆவின் பால் கிடைப்பது கிடையாது. நகரங்களில் மட்டுமே ஆவினின் ஆதிக்கம் இருக்கிறது.

எனவே கிராமப்புற மக்கள் பெரும்பாலும் தனியார் பால் நிறுவனங்களை நம்பிதான் இருக்கின்றனர். தனியார் பால் பாக்கெட்டுகள், ஆவின் பால் பாக்கெடுகளுடன் ஒப்பிடும்போது விலை அதிகம். இப்படி இருக்கையில் மேலும் விலை உயர்த்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருப்பது மக்களிடையே அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது.












Click it and Unblock the Notifications