அப்ளை பண்ணுவதில் சிக்கலா? TNPSC குரூப் 2, 2ஏ தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு! அரசின் அடடே அப்டேட்.!
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் காரணங்களினால் இணைய வழியாக TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கு இயலவில்லை என தேர்வர்கள் தெரிவித்ததால் தேர்வர்கள் விண்ணப்பிப்பதற்கும் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கும் நாளை வரை கால தீட்டிப்பு வழங்கப்படுகிறது என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு பணிகளுக்கு ஆட்கள் சேர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி செயல்பட்டு வருகிறது. ஏஓ முதல் ஆர்டிஓ வரை குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல்வேறு தேர்வுகளை நடத்தி பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

அந்த வகையில் 2024ஆம் ஆண்டு காலியாக உள்ள உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், வனவர் உள்ளிட்ட குரூப் 2 பதவிகளுக்கு 507 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
இதே போல உதவியாளர், நேர்முக உதவியாளர், கணக்கர் உள்ளிட்ட பல்வேறு குரூப்பு 2 ஏ பதவிகளில் சுமார் 1820 காலி பணியிடங்கள் என மொத்தமாக 20327 காலி பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜூன் 20ஆம் தேதி வெளியிட்டிருந்தது. குரூப் 2 மற்றும் 2 ஏ முதல் நிலை தேர்வுகள் வருகிற செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தேர்வர்கள் பலரும் ஆர்வத்துடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வந்தனர்.
www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும், 19ஆம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று கடைசி நாள் எனவும் அறிவித்திருந்தது. இதேபோல ஏற்கனவே விண்ணப்பித்த தேர்வர்கள் தங்களது விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய 24ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதன் மூலம் தேர்வர்கள் தங்கள் இணையவழி விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை திருத்தம் செய்யலாம், கால அவகாசம் நிறைவடைந்த பிறகு விண்ணப்பத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய அனுமதிக்கப்படாது என தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கடைசி நாளான இன்று ஏராளமான தேர்வர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வந்தனர். இந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்ணப்பிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் தொழில்நுட்பக் காரணங்களினால் இணைய வழியாக TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கு இயலவில்லை என தேர்வர்கள் தெரிவித்ததால் தேர்வர்கள் விண்ணப்பிப்பதற்கும் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கும் 20.07.2024 11.59 pm வரை கால தீட்டிப்பு வழங்கப்படுகிறது என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,"தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்.B.2024 நாள் 20.062024 இன் வாயிலாக ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு II (தொகுதி II மற்றும் IIA) பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கு இணைய வழி விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் மற்றும் நேரம் 19.07.2024 11.50 pm என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தொழில்நுட்பக் காரணங்களினால் இணைய வழியாக விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கு இயலவில்லை என தேர்வர்கள் தெரிவித்ததால் தேர்வர்கள் விண்ணப்பிப்பதற்கும் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கும் 20.07.2024 11.59 pm வரை கால தீட்டிப்பு வழங்கப்படுகிறது." என கூறப்படுகிறது. எனவே தேர்வர்கள் நாளை வரை குரூப் - 2 தேர்வுக்கு விண்ணப்பிக்கவும், தேர்வு கட்டணம் செலுத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications