டிகிரி போதும்! வனத்துறையில் டேட்டா என்ட்ரி, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் வேலை! மதுரையிலேயே பணி
மதுரை: தமிழ்நாடு வனத்துறையில் மதுரை வனக்கோட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி முடித்தவர்கள் வரும் 14ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம்.
தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளின்படி அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் மதுரை வனக்கோட்டத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:

மதுரை வனக்கோட்டத்தில் தொழில்நுட்ப உதவியாளர் (டெக்னிக்கல் அசிஸ்டென்ட்), தரவு நுழைவு இயக்குபவர் (டேட்டா என்ட்ரி) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிஎஸ்சி வனவியல், வேளாண்மை அல்லது எம்எஸ்சி வனவிலங்கு உயிரியல், லைப் சயின்ஸ், தாவரவியல், விலங்கியல், நேச்சூரல் சயின்ஸ் அல்லது அதற்கு இணையான 2 ஆண்டு அனுபவம் கொண்ட களநிலை ஆராய்ச்சி செய்த அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
இல்லாவிட்டால் எம்சிஏ அல்லது அதற்கு சமமான எம்ஐஎஸ்/ஜிஐஎஸ் 2 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இதுதவிர தமிழ்நாடு வனத்துறையின் பணியாளர்கள் தர ஊதியம் ரூ.4,800 மற்றும் அதற்கு மேல்உரிய அனுபவத்துடன் ஒய்வு பெற்றவர்களும் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பட்டம்/டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இல்லாவிட்டால் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து கம்ப்யூட்டர் பயன்பாடுகளில் சான்றிதழுடன் பட்டம்/டிப்ளமோ முடித்திருப்பதோடு, கம்ப்யூட்டரில் ஆங்கிலம் மற்றும் தமிழில் ‛டைப்' செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். ‛‛உதவி வனப்பாதுகாவலர் அலுவலகம், வேளாண் வனவியல் ஆராய்ச்சி கோட்டம், வனவளாகம், ரேஸ்கோர்ஸ் ரோடு, மதுரை - 2, தொலைபேசி எண்: 0452 - 2531148'' என்ற முகவரியில் விண்ணப்பம் பெற்று ஆகஸ்ட் 14ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். சந்தேகம் இருப்பின் வேலை நாட்களில் மேற்கூறிய தொடர்பு எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணல் முறையில் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இது ஒரு தற்காலிக பணியாகும். மாத சம்பளம் குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் தகுதியின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்படும்.
-
அதிகாலையில் வந்த மெயில்.. மீண்டும் வேலையை காட்டிய மெட்டா! ஊழியர்கள் கண்ணீர்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications