தமிழக அரசு வருவாய் துறையில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள்.. ரெடியாக இருங்க! வரப்போகுது சூப்பர் சான்ஸ்
சென்னை: தமிழக அரசு வருவாய் துறையில் அலுவலக உதவியாளர் (Revenue Department Office Assistant Jobs) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாக உள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட வாரியாக காலியிடங்கள் அறிவிக்கப்படும். சொந்த மாவட்டத்திலேயே அரசு வேலை பார்க்க வேண்டும் என கனவுடன் இருப்பவர்களுக்கு இது ஒரு சூப்பர் வாய்ப்பாக இருக்கலாம்.
தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகம் முழுவதும் வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு, இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உள்ளூரில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை
இந்த பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எழுத்துத் திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் உள்ளூரில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளித்து இந்த பணியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டிருந்தது. இதற்கான விண்ணப்பங்கள் பரிசீலனை, ஹால் டிக்கெட் வெளியீடு உள்ளிட்டவை போன்ற பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
வருவாய் துறை அலுவலக உதவியாளர் பணி
இந்த நிலையில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வருவாய் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் நேர்முக உதவியாளர் (பொது) மூலம் நியமிக்கலாம் என்று தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படாமல் இருக்கும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
1,000 பணியிடங்கள் நிரப்பப்படும்
ஏற்கனவே இதற்கான ஒப்புதலை அரசு அளித்திருந்த போதிலும், அவை நிரப்பப்படாமல் இருந்தன. எனவேதான் தற்போது உடனடியாக வருவாய்துறை அலுவலகங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை தாமதமின்றி நிரப்புவதுடன், அது தொடர்பான அறிக்கையை உடனடியாக அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா, ஐ.ஏ.எஸ். உத்தரவிட்டுள்ளார்.
எனவே, இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட வாரியாக காலியிடங்கள் அறிவிக்கப்படும். சொந்த மாவட்டத்திலேயே அரசு வேலை பார்க்க வேண்டும் என கனவுடன் இருப்பவர்களுக்கு இது ஒரு சூப்பர் வாய்ப்பாக இருக்கலாம்.
அமுதா ஐஏஎஸ் உத்தரவு
இந்த பணியிடங்களுக்கு கடந்த முறை 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனவே அதனை பின்பற்றியே கல்வித் தகுதி உள்ளிட்டவை இருக்கும் என தெரிகிறது. காலிப் பணியிடங்கள், விண்ணப்ப நடைமுறைகள் தொடர்பாக மாவட்ட வாரியாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பெ. அமுதா, ஐ.ஏ.எஸ்., கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிர்வாக ஆணையருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருந்ததாவது:-
அலுவலக உதவியாளர் பணியிடங்கள்
"வருவாய்த் துறையில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 3 வருடங்களுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விதிகளுக்கு உட்பட்டு நிரப்பலாம் என்று ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தும், இதுவரை அக்காலிப் பணியிடங்களை நிரப்ப எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, மேற்காணும் காலிப் பணியிடங்களை மேலும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிரப்ப நடவடிக்கை மேற்கொண்டு, அதன் அறிக்கையை அரசுக்கு அனுப்புமாறு தங்களை கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
-
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
பென்ஷன் வாங்குகிறீர்களா.. தேடி வந்த குட் நியூஸ்: பென்ஷன் ஃபண்ட் கட்டணத்தில் மாற்றம்.. பணம் கொட்டும் -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை












Click it and Unblock the Notifications