Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக அரசு வருவாய் துறையில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள்.. ரெடியாக இருங்க! வரப்போகுது சூப்பர் சான்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு வருவாய் துறையில் அலுவலக உதவியாளர் (Revenue Department Office Assistant Jobs) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாக உள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட வாரியாக காலியிடங்கள் அறிவிக்கப்படும். சொந்த மாவட்டத்திலேயே அரசு வேலை பார்க்க வேண்டும் என கனவுடன் இருப்பவர்களுக்கு இது ஒரு சூப்பர் வாய்ப்பாக இருக்கலாம்.

தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகம் முழுவதும் வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு, இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Revenue Department Job Jobs Employment

உள்ளூரில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை

இந்த பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எழுத்துத் திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் உள்ளூரில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளித்து இந்த பணியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டிருந்தது. இதற்கான விண்ணப்பங்கள் பரிசீலனை, ஹால் டிக்கெட் வெளியீடு உள்ளிட்டவை போன்ற பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

வருவாய் துறை அலுவலக உதவியாளர் பணி

இந்த நிலையில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வருவாய் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் நேர்முக உதவியாளர் (பொது) மூலம் நியமிக்கலாம் என்று தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படாமல் இருக்கும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

1,000 பணியிடங்கள் நிரப்பப்படும்

ஏற்கனவே இதற்கான ஒப்புதலை அரசு அளித்திருந்த போதிலும், அவை நிரப்பப்படாமல் இருந்தன. எனவேதான் தற்போது உடனடியாக வருவாய்துறை அலுவலகங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை தாமதமின்றி நிரப்புவதுடன், அது தொடர்பான அறிக்கையை உடனடியாக அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா, ஐ.ஏ.எஸ். உத்தரவிட்டுள்ளார்.

எனவே, இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட வாரியாக காலியிடங்கள் அறிவிக்கப்படும். சொந்த மாவட்டத்திலேயே அரசு வேலை பார்க்க வேண்டும் என கனவுடன் இருப்பவர்களுக்கு இது ஒரு சூப்பர் வாய்ப்பாக இருக்கலாம்.

அமுதா ஐஏஎஸ் உத்தரவு

இந்த பணியிடங்களுக்கு கடந்த முறை 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனவே அதனை பின்பற்றியே கல்வித் தகுதி உள்ளிட்டவை இருக்கும் என தெரிகிறது. காலிப் பணியிடங்கள், விண்ணப்ப நடைமுறைகள் தொடர்பாக மாவட்ட வாரியாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பெ. அமுதா, ஐ.ஏ.எஸ்., கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிர்வாக ஆணையருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருந்ததாவது:-

அலுவலக உதவியாளர் பணியிடங்கள்

"வருவாய்த் துறையில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 3 வருடங்களுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விதிகளுக்கு உட்பட்டு நிரப்பலாம் என்று ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தும், இதுவரை அக்காலிப் பணியிடங்களை நிரப்ப எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, மேற்காணும் காலிப் பணியிடங்களை மேலும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிரப்ப நடவடிக்கை மேற்கொண்டு, அதன் அறிக்கையை அரசுக்கு அனுப்புமாறு தங்களை கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+