58,600 ரூபாய் வரை சம்பளம்.. இந்து சமய அறநிலையத்துறையில் வேலை! இன்னும் 10 நாள் தான் இருக்கு!
சென்னை: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் மருத்துவ மையத்தில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் இந்த மருத்துவ மையத்தில் மருத்துவர், செவிலியர், நர்சிங் உதவியாளர் என மொத்தம் 6 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தக் காலிப்பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்து மதத்தைச் சார்ந்த தமிழ்நாட்டு விண்ணப்பதாரர்களிடம் இருந்து நவம்பர் 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலிப்பணியிட விவரங்கள்
1. மருத்துவர் (Medical Officer)
காலியிடங்கள்: 2
தகுதி: எம்பிபிஎஸ் பட்டம்
சம்பளம்: ரூ.36,700 - 1,16,200
2. உதவி செவிலியர் (Staff Nurse)
காலியிடங்கள்: 2
தகுதி: ANM / Diploma in Nursing
சம்பளம்: ரூ.18,500 - 58,600
3. நர்சிங் உதவியாளர் (Nursing Assistant)
காலியிடங்கள்: 2
தகுதி: பிளஸ்-2 தேர்ச்சி
சம்பளம்: ரூ.11,600 - 36,800
வயது வரம்பு:
எல்லா பணியிடங்களுக்கும் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
எந்தத் விண்ணப்பக் கட்டணமும் இல்லை.
தேர்வு நடைமுறை:
வரப்பெறும் விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு, தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வு அழைப்பு அனுப்பப்படும். நேர்முகத் தேர்வின் அடிப்படையில் இறுதி தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை:
அதிகாரப்பூர்வ இணையதளமான melmalayanurangalamman.hrce.tn.gov.in மூலம் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். படிவத்தை தெளிவாக பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களும் இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பம் அனுப்பப்படும் உறையின் மீது விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
உதவி ஆணையர் / செயல் அலுவலர்
அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில்
மேல்மலையனூர் (ம) வட்டம்
விழுப்புரம் மாவட்டம் - 604 204
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 24.11.2025












Click it and Unblock the Notifications