நோ எக்ஸாம்-இன்டர்வியூ.. மாத ஊதியம் ரூ.62,000.. டிஎன்எம்ஆர்பியில் 2,500 காலியிடம்! தமிழகத்திலேயே பணி
சென்னை: தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் ஆக்சிலரி நர்ஸ் மற்றும் கிராம சுகாதார நர்ஸ் பணிக்கு 2,500 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.19,500ம், அதிகபட்சமாக ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு டிஎன்எம்ஆர்பி எனும் தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்(TNMRB or Tamil Nadu Medical Recruitment Board) சார்பில் ஆட்சேர்ப்பு நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் நேற்று முன்தினம் புதிய காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடம்-சம்பளம்: தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் சுகாதாரத்துறையில் காலியாக ஆக்சிலரி நர்ஸ் மற்றும் கிராம சுகாதார நர்ஸ் பிரிவில் மொத்தம் 2,500 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.19,500 வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.62,000 வரை வழங்கப்படும்.
வயது வரம்பு: இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 18 வயது முதல் 42 வயதுக்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் ஓசி பிரிவை சேர்ந்தவர்களாக இருந்தால் 52 வயதுக்குள்ளும், கணவரை இழந்த ஓசி பிரிவை சேர்ந்த பெண்கள் என்றால் 59 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மாறாக எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ, பிசி, பிசிஎம், எம்பிசி, டிஎன்சியை சேர்ந்தவர்கள் என்றால் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 13.09.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
கல்வி தகுதி: பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிளஸ் 2 முடித்து 2 ஆண்டுக்கான மல்டி பர்பஸ் ஹெல்த் வொர்க்கர் டிரெய்னிங் கோர்ஸ்/ ஆக்சிலரி நர்ஸ் மிட்வைப்ரி டிரெய்னிங் கோர்ஸ் முடித்து தமிழ்நாடு நர்சஸ் மற்றும் மிட்வைப்ஸ் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.mrb.tn.gov.in இணையதளம் மூலம் அக்டோபர் மாதம் 31ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.600 நிர்ணயம் செய்ப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்சி, எஸ்டி, டிஏபி(பிஎச்), கைம்பெண்களுக்கு கட்டணம் ரூ.300 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு விண்ணப்பம் செய்வோரின் 10, பிளஸ் 2, சான்று படிப்பு முடித்ததன் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்க்காணல் கிடையாது. இதன்மூலம் எழுத்து தேர்வு இல்லை என்பதும் உறுதியாகி உள்ளது. இருப்பினும் இது ஒரு தற்காலிக பணியாகும்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம்












Click it and Unblock the Notifications