ரெடியா? மாத ஊதியம் ரூ.37,700 டூ ரூ.1.90 லட்சம்! தமிழகத்திலேயே அரசு வேலை! டிஎன்பிஎஸ்சி ‛குட்நியூஸ்’
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் ஒருங்கிணைந்த புவியியல் துணை சேவை தேர்வில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.37,700 முதல் ரூ.1.19 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வேலையை டிஎன்பிஎஸ்சி எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த தேர்வாணையம் சார்பில் தற்போது புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி தற்போது ஒருங்கிணைந்த புவியியல் துணை சேவையின் கீழ் உதவி ஜியாலஜிஸ்ட் பொறுப்பில் (Assisatant Geologist for Combined Geology Subordinate service Examination) 40 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் நீர்வளத்துறையில் நிலத்தடி நீர் விங்கிற்கு 11 பேரும், புவியியல் மற்றும் கனிம வளத்துறையில் 29 பேரும் பணியமர்த்தப்பட உள்ளனர்.

விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சமாக 18 வயதும் அதிகபட்சமாக 32 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். ஆதிதிரவிடர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வயது வரம் இல்லை. வயது வரம்பு என்பது 1.7.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
பணிக்கு விண்ணப்பம் செய்வோர் எம்எஸ்சி பிரிவில் Geology, Applied Geology, Hydrogeology உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக குறைந்தபட்சம் ரூ.37,700 முதல் அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 500 வரை வழங்கப்படும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.tnpscexams.in அல்லது www.tnpsc.gov.in இணையதளங்கள் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய மே மாதம் 26ம் தேதி கடைசிநாளாகும். விண்ணப்பம் செய்ய பதிவு கட்டணமாக ரூ.150, தேர்வு கட்டணமாக ரூ.150 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
பணிக்கு விண்ணப்பம் செய்ய ஜூன் மாதம் 23ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய ஜூன் 28 ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை நேரம் வழங்கப்படுகிறது. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, நேர்க்காணல் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள். இந்த எழுத்து தேர்வு 2 கட்டமாக ஆகஸ்ட் மாதம் 18 ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 9.30 மணி முத்ல மதியம் 312.30 மணி வரை முதல் தாள் தேர்வும், மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 2ம் தாள் தேர்வும் நடைபெற உள்ளது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications