டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு... இது ஸ்வீட் செய்தி அல்ல.. அதென்ன 326.. மலைக்க வைத்த மக்கள்
சென்னை: 6 ஆயிரத்து 244 பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பத்துள்ளார்கள். சரியாக புள்ளிவிவரத்துடன் சொல்வது என்றால், ஒரு இடத்துக்கு 326 பேர் போட்டியிடுகிறார்கள்.
தமிழ்நாட்டில் அதிகப்படியான மக்கள் அரசு வேலைகளில் சேர உதவும் தேர்வு என்றால், சந்தேகமே வேண்டாம் அது குரூப் 4 தேர்வு தான். கடந்த முறை நடந்த தேர்வின் மூலம் சுமார் 10000 பேர் அரசு வேலையில் சேர்ந்தனர். இந்த முறை ஆறு ஆயிரத்திற்கும் அதிகமானோர் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

குரூப் 4 என்பது அரசு ஊழியர்கள் ஆக விரும்புவோருக்கான முக்கியமான தேர்வு ஆகும். இந்த குரூப் 4 தேர்வின் கீழ் கிராம நிர்வாக அலுவலர் 108, இளநிலை உதவியாளர் 2,604, தட்டச்சர் 1,705, சுருக்கெழுத்துதட்டச்சர் 445, தனி உதவியாளர், கிளர்க் 3, தனி செயலாளர் 4, இளநிலை நிர்வாகி 41, வரவேற்பாளர் 1, பால் பதிவாளர் 15, ஆய்வக உதவியாளர் 25, பில் கலெக்டர் 66, தொழிற்சாலை மூத்த உதவியாளர் 49, வன பாதுகாவலர், காவலர் 1,177, இளநிலை ஆய்வாளர் 1 ஆகிய 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த ஜனவரி மாதம் 30ந் தேதி வெளியிட்டது.
டிஎன்பிஎஸ்சி என்று சுருக்கமாக அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பின் படி, இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கடந்த பிப்ரவரி 8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் வழக்கமாக டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் அதிகப்படியானவர்கள் விண்ணப்பிக்கக்கூடிய தேர்வாக குரூப் 4 தேர்வு தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்களுக்கும் தேர்வர்கள் லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து இருந்தார்கள்.
எப்போதுமே குரூப் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானால், விண்ணப்பப் பதிவுக்கு காலஅவகாசம் நீட்டிக்கப்படும். ஆனால் அதுதொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஏற்கனவே அறிவித்தபடி, கடந்த பிப்ரவரி மாதம் 28ந் தேதியுடன் விண்ணப்பப் பதிவு நிறைவு பெற்றதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. இதனிடையே டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி 6 ஆயிரத்து 244 பணியிடங்களுக்கு 20 லட்சத்து 37 ஆயிரத்து 94 பேர் விண்ணப்பித்து இருப்பதாக டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது. அதாவது ஒரு பணியிடத்துக்கு சுமார் 326 பேர் போட்டியிடுகிறார்கள். விண்ணப்பித்தவர்களுக்கு எழுத்து தேர்வு வருகிற ஜூன் மாதம் 9ந் தேதி நடைபெற உள்ளது. கடந்த 2022ம் ஆண்டு அறிவிப்பு வெளியான 7 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட குரூப் 4 பணியிடங்களுக்கு 22 லட்சத்து 2 ஆயிரத்து 942 பேர் விண்ணப்பித்திருந்தார்கள். இந்த முறை அதைவிட அதிகமானோர் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications