Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Group 4: குரூப் 4 தேர்வர்களுக்கு முக்கிய தகவலை சொன்ன டிஎன்பிஎஸ்சி! இந்த தவறு பண்ணியிருந்தால் உடனே செக் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடப்பு ஆண்டில் கடந்த ஜூலை மாதம் குரூப் 4 தேர்வு (Group 4 Exam) நடைபெற்றது. இதற்கான அடுத்த கட்ட தேர்வு நடைமுறைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, கடந்த ஆண்டு குரூப் 4 தேர்வில் வெற்றிக்கு தேவையான கட் ஆஃப் பெற்ற தேர்வர்களுக்கு சான்றிதழ் பதிவேற்றம் தொடர்பாக ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அது என்ன என்பதை இங்கு பார்க்கலாம்.

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழக அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தால் நிரப்பப்படுகிறது. குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சியால் நிரப்பப்படுகிறது.

Group 4 job TNPSC 4

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு

நன்றாக படித்து போட்டித் தேர்வில் வெற்றிபெற்றால் போதும்.. உடனடியாக வேலை கிடைக்கும். யாரிடமும் சிபாரிசுக்கு போய் நிற்க வேண்டியதில்லை. படித்து வெற்றி பெற்றால் வேலை நிச்சயம் என்பதால், டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகள் தமிழகத்தில் அரசு பணிகளுக்காக காத்திருக்கும் பல லட்சம் தேர்வர்களுக்கு கலங்கரை விளக்கமாக உள்ளது.. குரூப் தேர்வுகளில் குரூப் 4 தேர்வு என்பது பத்தாம் வகுப்பு கல்வி தகுதி கொண்டதாகும்.

விஏஓ, இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் இதில் நிரப்பப்படுகின்றன. பிற தேர்வுகளை விட குரூப் 4 தேர்வுக்கு தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டி இருக்கும். சில ஆயிரம் பணியிடங்களுக்கு கூட பல லட்சக்கணக்கான தேர்வர்கள் போட்டி போடுவார்கள். தேர்வு திருவிழா என சொல்லும் அளவுக்கு தமிழகம் முழுக்க குரூப் 4 தேர்வு நடைபெறும் என்று பேருந்து நிலையங்கள், பள்ளிகள் என எங்கு பார்த்தாலும் குரூப் 4 தேர்வர்களையே கண்ணில் காண முடியும்.

டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு

அந்த அளவுக்கு குரூப் 4 தேர்வுகளுக்கு போட்டி நிலவுகிறது. இந்த ஆண்டு கடந்த ஜூலை மாதம் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இதற்கான அடுத்த கட்ட தேர்வு நடைமுறைகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, கடந்த ஆண்டு குரூப் 4 தேர்வில் வெற்றிக்கு தேவையான கட் ஆஃப் பெற்ற தேர்வர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

குறைபாடாக சான்றிதழ் பதிவேற்றம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 01/2024 நாள்: 30.01.2024 இன் வாயிலாக ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - IV (தொகுதி - IV பணிகள்) உள்ள வனக் காவலர் மற்றும் வனக் காப்பாளர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கு தேர்வர்களால் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டதில், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்னர் சில தேர்வர்கள் உரிய சான்றிதழ்களை குறைபாடாக / சரியாக பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

விண்ணப்பம் நிராகரிக்கப்படும்

எனவே, இத்தகைய தேர்வர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கும் விதமாக 30.08.2025 முதல் 05.09.2025 இரவு 11.59 மணி வரை விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை மறுபதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது. இத்தகவல் அத்தேர்வர்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, அத்தேர்வர்கள் அனைவரும் மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் ஒருமுறைப் பதிவு தளம் (OTR) வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாத தேர்வர்களின் உரிமைகோரல் (claim)/ விண்ணப்பம் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+