டிஎன்பிஎஸ்சி குரூப் VII-B.. இந்து சமய அறநிலையத்துறையில் வேலை.. கல்வித்தகுதி - முழு விவரம்
இந்து சமய அறநிலையத்துறையில் வேலைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்து சமயத்தை பின்பற்றுபவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் VII-B (தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சார்நிலைப் பணி) செயல் அலுவலர் நிலை - III பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை வேலைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in / www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழ்நாடு இந்திய சமய அறநிலைய சார்நிலைப் பணிக்கு இந்து சமயத்தை பின்பற்றுபவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். செயல் அலுவலர் பதவிக்கு மொத்தம் 42 இடங்கள் காலியாக உள்ளன. சம்பளம் ரூ . 20,600-75900.
விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய இறுதி நாள் 17.06.2022. எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 10.09.2022. பட்டதாரிகள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்களின் உத்தேசப் பட்டியல் தயாரிக்கபபடும் . காலிப்பணியிடங்கள், இடஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசையின் படி மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.
இதே போல தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் Group 8 அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்து சமய அறநிலையத்துறையில் TNPSC Group 8 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம். டிஎன்பிஎஸ்சி, எக்ஸிகியூட்டிவ் ஆபிசர் Grade IV பதவிகளுக்கு இந்து மதத்தைச் சார்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
மொத்தம் 36 எக்ஸிகியூட்டிவ் ஆபிசர் Grade 4 காலிப் பணியிடங்களை இந்த வேலைவாய்ப்பு மூலம் TNPSC நிரப்ப உள்ளது. ஆன்லைன் விண்ணப்பப் படிவம் டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 18.06.2022 வரை கிடைக்கும்.
வாட்ச் பழுது.. பேப்பரை தா! 1 மணி நேரத்திற்கு முன்பே பிடுங்கிய விஜிலேட்டர்! கதறிய குரூப் 2 தேர்வர்கள்