குரூப் 2, 2ஏ தேர்வர்களுக்கு கடைசி சான்ஸ்.. இதை செய்யலன்னா அவ்ளோதான்.. டிஎன்பிஎஸ்சி முக்கிய அட்வைஸ்
சென்னை: துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், உதவியாளர், தணிக்கை ஆய்வாளர், முழுநேர விடுதி காப்பாளர் என குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகளில் மொத்தமாக 2,327 காலி பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான முதன்மை தேர்வு ரிசல்ட் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது முதன்மைத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி எனப்படும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக நிரப்பப்படுகிறது. குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 உள்ளிட்ட நிலைகளில் உள்ள பணியிடங்களை உரிய தேர்வு நடத்தி டிஎன்பிஎஸ்சி நிரப்பி வருகிறது.

குரூப் 2, 2ஏ தேர்வு
துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார்பதிவாளர் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் ஆகிய குரூப் 2 பதவிகளுக்கு 507 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன.
அதேபோல், உதவியாளர், தணிக்கை ஆய்வாளர், முழுநேர விடுதி காப்பாளர், முதுநிலை ஆய்வாளர், நேர்முக எழுத்தர், கணக்கர் உள்ளிட்ட பல்வேறு குரூப் 2ஏ பதவிகளில் சுமார் 1820 காலி பணியிடங்கள் என மொத்தமாக 2327 காலி பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டது.
இதற்கான முதன்மைத் தேர்வு முடிவு கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி வெளியான நிலையில், முதன்மைத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் தான் முதன்மைத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி கூறியிருப்பதாவது:-
சான்றிதழ் பதிவேற்றம் செய்யவில்லை
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 11/2025, நாள்: 15.07.2025-ன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளில் (தொகுதி II மற்றும் IIA பணிகள்) அடங்கியுள்ள பதவிகளுக்கான முதல் நிலைத் தேர்வு 28.09.2025 மு.ப தேதியில் நடைபெற்றது.
இதற்கான முதன்மைத் தேர்வு 08.02.2026 மு.ப (தொகுதி IIA பணிகள்) மற்றும் 08.02.2026 அன்று தமிழ் தகுதித் தேர்வு, மேலும் 22.02.2026 மு.ப (தொகுதி II பணிகள்) தேர்வும் நடைபெற உள்ளது. ஆனால், இதுவரை 766 விண்ணப்பதாரர்கள் முதன்மைத் தேர்வு கட்டணம் செலுத்தவில்லை மற்றும் 113 மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் தங்கள் உரிய மாற்றுத்திறனாளி சான்றிதழை பதிவேற்றம் செய்யவில்லை.
காலவரம்பு இனி நீட்டிக்கப்படாது
எனவே, அவர்களுக்கு வாய்ப்பளிக்கும் பொருட்டு OTR காலம் 30.12.2025 காலை 12.00 மணி முதல் 02.01.2026 இரவு 11.59 மணி வரை (அதாவது 4 நாட்கள்) நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள் முதன்மைத் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், தேர்வர்கள் உரிய மாற்றுத்திறனாளி சான்றிதழை தேர்வாணையத்தின் இணையதளமான **http://www.tnpsc.gov.in**-ல்
பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், காலவரம்பு இனி நீட்டிக்கப்படமாட்டாது.
-
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா?












Click it and Unblock the Notifications