தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு.. காரணம் என்ன?
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிகளுக்கான எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தெரிவித்து உள்ளார். தூத்துகுடி மாவட்டத்தில் மொத்தம் 77 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியிருந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், சாத்தான்குளம், கோவில் பட்டி உள்ளிட்ட 9 வட்டங்களில் காலியாக உள்ள 77 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்கான எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு தேதியை மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருந்தது.

கிராம உதவியாளர் பணி
இந்த நிலையில், தற்போது தேர்வுகளை ஒத்திவைப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளர். ஏற்கனவே வயது வரம்பு உயர்த்தப்பட்டதால் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள், மறு அறிவிப்பு வெளியிடப்பட்டு மீண்டும் நடைபெறுவதாக இருந்த நிலையில் தற்போது மறுபடியும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது தேர்வர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. தேர்வுகள் ஒத்திவைப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு பின்வருமாறு:-
கலெக்டர் அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஏரல், சாத்தான்குளம், கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் மற்றும் கயத்தார் ஆகிய 9 தாலுகாக்களில் 2025-ம் ஆண்டு கிராம உதவியாளர் பணி நியமனம் தொடர்பாக உச்சபட்ச வயது வரம்பு மறுவரையறைக்கு பின்னர், 01.11.2025 முதல் 15.11.2025 வரையிலும் தாலுகா அலுவலகங்களில் நேரிலும் மற்றும் தபால் மூலமாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதைத் தொடர்ந்து 17.12.2025 (புதன்கிழமை) அன்று கிராம உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வும், அதனைத் தொடர்ந்து 02.01.2026 (வெள்ளிக்கிழமை) அன்று முதல் நேர்முகத் தேர்வும் நடைபெற இருந்தது. இந்த எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அனைத்தும் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
காலிப்பணியிடங்கள்:
ஏரல் - 02,
எட்டயபுரம் - 10,
கயத்தாறு தாலுகா - 21,
கோவில்பட்டி - 07,
ஓட்டப்பிடாரம் தாலுகா - 05,
சாத்தான்குளம் - 08,
ஸ்ரீவைகுண்டம் - 04,
திருச்செந்தூர் - 07,
விளாத்திகுளம் - 13
கல்வித் தகுதி:
10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணபிக்க முடியும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் தாலுகாவில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
சம்பளம் எவ்வளவு?
சிறப்பு காலமுறை ஊதியம் லெவல் 06-படி மாதம் ரூ.11,100 - ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications