Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மத்திய அரசு அதிகாரி ஆகணுமா? டிகிரி முடித்தவர்களுக்கு செம சான்ஸ்! யுபிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய பணியாளர் தேர்வு ஆணையமான யுபிஎஸ்சி, அமலாக்க அதிகாரி / கணக்கு அதிகாரி மற்றும் உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் பதவிகளுக்கு காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 230 பணியிடங்கள் நிரப்பப் படுகிறது. இந்த பணியிடங்களுக்கு விண்ணபிப்பதற்கான தகுதிகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும்.

மத்திய அரசில் உயர் பொறுப்பு உள்ள அதிகாரி பணியிடங்களை மத்திய பணியாளர் தேர்வு ஆணையமான யுபிஎஸ்சி நிரப்பி வருகிறது. ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் மட்டுமின்றி பல்வெறு துறைகளில் உள்ள அதிகாரி பணியிடங்களும் யுபிஎஸ்சி மூலம் நிரப்பபடுகிறது. அரசு விதிகளின்படி உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு போட்டி தேர்வுகளுக்கு பிறகு பணியிடங்கள் நிரப்பபடுகிறது. அந்த வகையில் தற்போது 230 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்டவற்றை பார்க்கலாம்.

job Employment UPSC

பணியிடங்கள் விவரம்:

1. அமலாக்க அதிகாரி / கணக்கு அதிகாரி - 156
2. உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் - 74

என மொத்தம் 230 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வித் தகுதி:

அமலாக்க அதிகாரி / அக்கவுண்ட்ஸ் ஆபிசர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் அங்கீகரிக்கபட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருந்தால் போதும்.

உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் பணிக்கு டிகிரி முடித்து இருக்க வேண்டும். கம்பெனி சட்டம் / தொழிலாளர் சட்டம், பொது நிர்வாகம் ஆகிய படிப்புகள் முடித்து இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.

வயது வரம்பு:

18.08.2025 தேதிப்படி அமலாக்க அதிகாரி பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். உதவி வருங்கால வைப்பு ஆணையர் பணிக்கு 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிகளை பின்பற்றி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். அதாவது, எஸ்சி/எஸ்டி பிரிவினர் என்றால் ஐந்து ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

சம்பளம் எவ்வளவு:

1. அமலாக்க அதிகாரி / கணக்கு அதிகாரி - மாதம் ரூ.47,600 - ₹1,51,100 வரை வழங்கப்படும்.
2. உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் - ₹56,100 - ₹1,77,500 வரை வழங்கப்படும்.

தேர்வு முறை;

போட்டி தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவை அடிப்படையின் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை முழுமையாக படித்து தெரிந்து கொண்ட பிறகு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.25 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி / எஸ்டி மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. விண்ணப்பிக் அவகாசம் தொடங்கும் நாள்; 29.7.2025 ஆகும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.08.2025 ஆகும்.

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://upsconline.nic.in/

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+