குறிப்பு வரைய முடியாது.. வேணும்னா குருவி படம் வரையறேன்....!
இந்த காலத்து பசங்களுக்கு கேள்விக்கு பதில் தெரியுதோ இல்லையோ? பக்கத்தை நிரப்பும் வித்தை நிறைய தெரிந்துள்ளது.
கன்னியாகுமரியில் 2வது டேர்ம் பரிட்சை பேப்பர் திருத்திய ஆசிரியர் சில கேள்விகளுக்கான பதிலை படித்து சற்றே குழம்பித்தான் போனார் நீங்களும் உங்க பங்குக்கு படித்து சிரிக்கலாம்.
கேள்வி: சிவாஜி, அலெக்சாண்டர் உலகின் தலைசிறந்த வீரர் யார்?
மாணவன் பதில்: நிச்சயமாக சிவாஜிதான்.ஏனென்றால் அவர்தான் பஞ்ச் டயலாக் பேசிக்கொண்டே நூறு பேரை அடித்து வீழ்த்தியவர். ஆனால் அலெக்சாண்டர் பத்து பேரை மட்டுமே அடித்துள்ளார் எனவே சிவாஜிதான் தலை சிறந்த வீரர்.
கேள்வி: பானிபட் போர் எதனால் நிகழ்ந்தது? குறிப்பு வரைக
மாணவன் பதில்: வடநாட்டில் பானிபூரி எனப்படும் ஒருவகை உணவிற்காகவும், பானி எனப்படும் தண்ணீருக்காகவும் பானிப்பட் போர் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
நான் பானிபூரி சாப்பிட்டதில்லை என்பதால் என்பதால் என்னால் குறிப்பு வரையமுடியாது. வேண்டுமானால் ஒரு குருவி படம் வரைகிறேன்.
திருத்தும் ஆசிரியர்: ?????