பாலக் கீரையை கடையத்தான் வேண்டுமா என்ன? குட்டீஸ்களுக்கு பிடிச்சா மாதிரி ஒரு ரெசிபி செய்யலாமே!
சென்னை: குழந்தைகளுக்கு கீரையை எந்த வகையில் கொடுத்தாலும் வேண்டாம் என்கிறார்களா, கவலையை விடுங்க! இந்த வகையில் செய்து பாருங்கள். மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.
குழந்தைகளை சாப்பிட வைப்பது என்பது தாய்மார்களுக்கு சவாலான விஷயம். அதிலும் அவர்களுக்கு பிடிக்காத உணவுகள், உடல் நலனுக்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வைப்பது என்பது சற்று கடினம்தான்.

ஆனாலும் ஏதாவது ஒரு வகையில் காயோ அல்லது கீரையோ அல்லது உணவு பொருளின் சத்தோ அந்த குழந்தைக்கு போய் சேர வேண்டும். அந்த வகையில் பாலக் பராத்தா செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
பாலக் என்றால் கீரை என்று அர்த்தம். அது ஒரு வகையான கீரையாகும். இந்த கீரையை வைத்து ஒரு பராத்தா எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
பாலக் பராத்தா செய்ய தேவையான பொருட்கள்
பாலக் கீரை- தேவையான அளவு
இஞ்சி- சிறிதளவு
பச்சை மிளகாய்- 1
உப்பு- தேவையான அளவு
காய்ந்த வெந்த இலைகள் (மேத்தி லீவ்ஸ்)- சிறிது
எண்ணெய்- தேவையான அளவு

முதலில் பாலக் கீரையை ஆய்ந்து அதை தண்ணீரில் கல் உப்பு சேர்த்து சிறிது நேரம் ஊற வைத்துவிடவும். அப்போதுதான் கீரையில் ஏதாவது பூச்சிகள் இருந்தாலும் போய்விடும். பிறகு கீரையை மீண்டும் ஒரு முறை அலசி தண்ணீர் வடிய விட வேண்டும்.
தண்ணீர் வடிந்த பிறகு கீரையை மிக்ஸி கப்பில் போட்டு இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். பிறகு இந்த கலவையை சாப்பாத்தி மாவில் சிறிது உப்பு கலந்து அதில் இந்த கீரை பேஸ்ட்டை போட்டு நன்கு பிசைய வேண்டும். சிறிது நேரம் ஊறிய பிறகு சப்பாத்தியாக தேய்த்து தோசை கல்லில் போட்டு எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications