புடலங்காயை கண்டால் பாம்பை கண்டது போல் குழந்தைகள் ஓடுகிறார்களா? இனி ஸ்னேக்கார்டில் ரிங் செய்யுங்க
சென்னை: புடலங்காயை கண்டால் பாம்பை கண்டது போல் குழந்தைகள் ஓடுகிறார்களா, இனி இப்படி செய்து தாருங்கள், மீண்டும் மீண்டும் கேட்பார்கள்.
புடலங்காய்- நீர் காய்கறிகளில் ஒன்று. இதை வைத்து பொரியல், கூட்டு செய்யலாம். ஆனால் இந்த காயை குழந்தைகள் விரும்ப மாட்டார்கள். பொதுவாக குழந்தையாக இருக்கும் போதே சில காய்களை அவர்களுக்கு பழக்கப்படுத்தினால்தான் பெரியவர்கள் ஆகும் போது அந்த காயை அவர்கள் விரும்பி சாப்பிடும் நிலைக்கு கொண்டு செல்லலாம்.
இல்லாவிட்டால் என்னதான் செய்தாலும் புடலங்காயை வாங்கி சமைக்கவே முடியாத நிலை ஏற்படும். குழந்தைகளுக்கு ரசம் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள ஒரு ஸ்னேக்கார்டு ரிங் எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
புடலங்காய்- 2 எண்ணிக்கை
மைதா மாவு- 100 கிராம்
சில்லி பிளேக்ஸ்- 1 டீஸ்பூன்
ஓரிகனோ - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள்- 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை - அரை கைப்பிடி
பூண்டு- 4 பல்
தண்ணீர், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
ரொட்டித் தூள்- சிறிது

செய்முறை
புடலங்காயை உள்ளே உள்ள சதை பகுதியை எடுத்துவிட்டு ரவுண்ட் ரவுண்டாக கட் செய்து கொள்ள வேண்டும். பிறகு சிறிது மாவை தூவி கிளறி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் மீதமுள்ள மைதா, சில்லி பிளேக்ஸ், ஓரிகனோ, மிளகுத்தூள், கொத்தமல்லி தழை, உப்பு, நசுக்கிய பூண்டு, தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
பின்னர் புடலங்காய் வளையங்களை ஒவ்வொன்றாக மாவில் தோய்த்து ரொட்டித் தூளில் நன்றாக புரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இதை தயிர் சாதத்திற்கும் தொட்டுக் கொள்ளலாம். குழந்தைகளும் இது போல் செய்து கொடுத்தால் மறுக்காமல் சாப்பிடுவார்கள்.












Click it and Unblock the Notifications