Kollu Rasam.. கொழுப்பை குறைக்கும்.. இதயத்தை பாதுகாக்கும்.. கொள்ளு ரசம் செய்வது எப்படி?
சென்னை: உடலுக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்தும் கொள்ளு ரசம் குறித்து பார்க்கலாம்.
இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்துவனுக்கு கொள்ளு என்பார்கள். எள்ளை எள்ளு சாதம், எள்ளு பொடி, எள்ளுருண்டை உள்ளிட்டவைகளை செய்வது வழக்கம். ஆனால் கொள்ளை வைத்து என்னென்ன செய்வது என்பதை பார்ப்போம்.
கொள்ளை எப்படி செய்வது என தெரியாமல் நிறைய பேர் அதை வாங்கத் தயங்குவார்கள். ஆனால் இந்த கொள்ளை வைத்து நல்லதொரு ரசம் செய்து சாப்பிடலாம். அந்த வகையில் கொழுப்பை கரைப்பதில் கொள்ளுக்கு சக்தி உண்டு. இதில் நிறைய மருத்துவ பலன்களும் உள்ளது. இந்த கொள்ளை எப்படி ரசம் வைத்து சாப்பிடுவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்
- கொள்ளு- 100 கிராம்
- சீரகம்- 1 ஸ்பூன்
- மிளகு- 1 ஸ்பூன்
- தனியா- அரை ஸ்பூன்
- கருவேப்பிலை- சிறிது
- கொத்தமல்லி தழை- சிறிது
- பூண்டு- 5 பல்
- தக்காளி- 1
- புளி- சிறிது
- உப்பு - தேவையான அளவு
- கடுகு, மஞ்சள் தூள், பெருங்காயம், எண்ணெய் - சிறிதளவு
செய்முறை: முதலில் கொள்ளை எடுத்து சுத்தம் செய்து அதை ஒரு வாணலியில் போட்டு லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு வறுத்த கொள்ளை மிக்ஸியில் போட்டு கொர கொரப்பாக பொடித்துக் கொள்ள வேண்டும்.
தக்காளி, பூண்டு, மிளகு, சீரகம், தனியா ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து அரைக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொண்டு புளி கரைசலை ஊற்றிக் கொள்ள வேண்டும். பிறகு 3 டம்ளர் அளவிற்கு தண்ணீரை ஊற்றி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளலாம்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய், கறிவேப்பிலை போட்டு , பெருங்காயம் சேர்த்து தாளித்து விடவும். பிறகு ரசத்திற்கு கரைசலை போட்டு ஊற்றி நுரைத்து வந்ததும் அதில் சிறிது தண்ணீர் சேர்த்து வைத்தால் கொள்ளு ரசம் தயார்.












Click it and Unblock the Notifications