Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொலைகார கொக்கு..சூழ்ச்சியால் பகை வென்ற நண்டு..குட்டி ஸ்டோரி

மீன்கள் எல்லாம் கரையோரத்திற்கு வந்தன. கொக்கு ஒவ்வொரு நடைக்கும் ஒவ்வொரு மீனாகக் கொத்திக் கொண்டு பறந்து சென்றது. சிறிது துாரம் சென்றதும் அந்த மீன்களைக் கொத்தித் தின்றது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பகையை சூழ்ச்சியால் வெல்லலாம் என்று நம் வீட்டு பெரியவர்கள் கதை வடிவத்தில் சொல்லி வைத்திருக்கிறார்கள். இன்றைய கார்ப்பரேட் கால கட்டத்தில் எத்தனையோ சூழ்ச்சிகளை இளைய தலைமுறையினர் வெல்ல வேண்டும். அதற்கு கொக்கு செய்த சூழ்ச்சியை நண்டு எப்படி கண்டு பிடித்து பகை வென்றது என்ற கதை மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மீன் என்றால் கொக்குக்கு மிகவும் இஷ்டம். எப்படியாவது ஒற்றைக்காலில் தவமிருந்து மீனை கவ்விப்பிடித்து தின்று விடும்.

வழக்கம் போல ஒரு குளத்திற்கு மீனைக் கொத்தித் தின்னச் சென்றது. அப்போது குளத்தின் கரையில் ஒரு பால் நண்டு கவலையோடு இருந்தது. அந்த நண்டைப் பார்த்த கொக்கு, உனக்கு என்ன கவலை என்று கேட்டது.

Short story for Kids: The story of the Crane And Crab

என்ன சொல்வேன்! கொலைகாரர்களாகிய வலைகாரர்கள் இந்தப் பக்கத்திலுள்ள ஏரி, குளம் எல்லாம் வலை வீசி ஒரு சின்னஞ்சிறு பொடி மீன் கூட விடாமல் பிடித்துக் கொண்டு போய் விட்டார்கள். நாளைக்கு இந்தக் குளத்திற்கு வரவேண்டும் என்று பேசிக் கொண்டு போயிருக்கிறார்கள். நாளைக்கு வந்து பிடித்துக் கொண்டு போய் சந்தைக் கடைகளிலே வைத்து விற்று விடுவார்கள். இவர்கள் கைகளிலிருந்து தப்புவது எப்படி என்றுதான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்' என்று பால் நண்டு பதில் கூறியது.

அதைக்கேட்ட கொக்கு... மீன்களும் நீயும் உன் இனமும் உயிர் தப்புவதற்கு நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா என்று கேட்டது. எப்படி?' என்று நண்டு ஆவலோடு கேட்டது.

'எப்படியாவது, அந்த மீன்களையெல்லாம் இங்கே கூட்டிக் கொண்டு வா. நான் ஒவ்வொரு மீனாகத் தூக்கிக் கொண்டு போய் இன்னொரு குளத்தில் விட்டுவிடுகிறேன்' என்றது கொக்கு.

கொக்கு சொன்னதை நம்பிய அந்த நண்டு, மீன்களிடம் போய் இந்த யோசனையைக் கூறியது. எப்படியும் வலைகாரர்களிடமிருந்து தப்பினால் போதும் என்று நினைத்த மீன்கள் நண்டு சொன்ன ஐடியாவிற்கு உடனே ஒப்புக் கொண்டன.

மீன்கள் எல்லாம் கரையோரத்திற்கு வந்தன. கொக்கு ஒவ்வொரு மீனாகக் கொத்திக் கொண்டு பறந்து சென்றது. சிறிது துாரம் சென்றதும் அந்த மீன்களைக் கொத்தித் தின்றது. வயிறு நிரம்பிய பிறகு, கொண்டு போன மீன்களை ஒரு பாறையில் காயப் போட்டு வைத்தது.

Short story for Kids: The story of the Crane And Crab

கடைசியில் நண்டுதான் மிஞ்சியது. நண்டின் தசையையும் தின்னலாம் என்ற ஆசையோடு, அதையும் கொத்திக் கொண்டு பறந்து சென்றது. கொக்கு பறந்து செல்லும் வழி எங்கும் மீன் முட்கள் தரையில் கிடப்பதை நண்டு கண்டு கொண்டது. கொக்கு செய்த துரோகச் செயலை நண்டு புரிந்து கொண்டது.

மீன்களையெல்லாம் தின்றது போதாமல் நம்மையும் இந்தக் கொக்கு கொல்லத் துணிந்து விட்டது என்று நினைத்த நண்டு.. சூழ்ச்சியை, சூழ்ச்சி யால் தான் வெல்ல வேண்டும். நம்மை இது கொல்லும் முன் இதை நாம்; கொன்றுவிட வேண்டும்' என்று எண்ணியயது. மெல்லத் தன் முன்னங் கால்கள் இரண்டையும் நீட்டி, கொக்கின் கழுத்தை வளைத்துப் பிடித்து நெருக்கியது நண்டு. கழுத்து நசுங்கியதும், கொக்குக் கீழே விழுந்து உயிரை விட்டது.

நண்டு வேறொரு குளத்திற்குப் போய்த் தன் இனத்தோடு சேர்ந்து கொண்டது. என்ன குட்டீஸ்..பெரும் பகையையும் சூழ்ச்சியால் வெல்லலாம் என்பது இக்கதையிலிருந்து தெரிந்து கொண்டீர்களா? இந்த கதை குட்டீஸ்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும்தான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+