“ஓஹோ.. அப்போ கதை அப்டிப் போகுதா”.. இணையத்தைக் கலக்கும் பட்ஜெட் மீம்ஸ்கள்!
சென்னை: மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக கண்டனக்குரல்கள் வலுத்து வரும் சூழலில், மற்ற மாநிலங்களைவிட கூடுதலாக பீகார் மற்றும் ஆந்திராவுக்கு திட்டங்கள் வாரி வழங்கப்பட்டிருப்பதாக மீம்ஸ் போட்டு சுட்டிக் காட்டி வருகின்றனர் நெட்டிசன்கள்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் மீண்டும் பாஜக அரசு அமைவதற்கு பெரும் உறுதுணையாக இருந்தவர்கள் பீகார் மற்றும் ஆந்திர முதல்வர்களான நிதிஷ்குமாரும், சந்திரபாபு நாயுடுவும். அப்போதே அடுத்த பட்ஜெட்டில் அந்த மாநிலங்களுக்கு ஸ்பெஷல் கவனிப்பு இருக்கும் என சமூகவலைதளப் பக்கங்களில் கருத்துகள் உலா வந்தன.
தற்போது அதனை உண்மையாக்கும் விதமாக, நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் மற்ற மாநிலங்களைவிட பீகார் மற்றும் ஆந்திராவுக்குத்தான் திட்டங்கள் அதிகம் தரப்பட்டுள்ளன. ஏற்கனவே, தமிழகத்தை இந்த பட்ஜெட்டில் மத்திய அரசு புறக்கணித்து விட்டதாக ஆதங்கத்தில் இருக்கும் நம் மக்களுக்கு, இப்படி ஒருதலை.. இல்லையில்லை இருதலை பட்சமாக இரண்டு மாநிலங்களுக்கு மட்டும் அதிக திட்டங்கள் ஒதுக்கப்பட்டிருப்பது கோபத்தை ஏற்படுத்தியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
அதனால்தான் சமூகவலைதளப் பக்கங்களில் இது தொடர்பாக மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர். இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில பட்ஜெட் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






















Click it and Unblock the Notifications