சென்னையில் இனிமே போட்டிங் உங்க வீடு தேடி வரும்... மழை குறித்து நெட்டிசன்ஸ் அதகளம்
சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு குறித்து சமூக வலைளதங்களில் ஏராளமான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன.
சென்னை: கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு குறித்து சமூக வலைளதங்களில் ஏராளமான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன.
சென்னையில் கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் போது பல இடங்களில் படகு சேவை பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில் சென்னையில் பெய்த கனமழையால் தற்போது வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் சென்னையில் மீண்டும் படகு சேவை பயன்படுத்தப்படும் என்றும் சென்னை மக்கள் போட்டிங்குக்காக கொடைக்கானல் செல்ல வேண்டாம் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
|
இருந்துட்டு போய்டுவோம்.
இந்த மழை முடியற வரைக்கும் இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போய்டுவோம்.
#சென்னை_ரோடுகள் என்கிறது இந்த டிவிட்
|
கொடைக்கானல் போக வேண்டாம்
சென்னையில் இனிமே போட்டிங் உங்க வீடு தேடி வரும்... கொடைக்கானலுக்கு போய் காச வேஸ்ட் பண்ண வேண்டாம்
சீசன்: நவம்பர் #சென்னைமழை என கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன்
|
ஏரிகள் தெரியலயே
#ChennaiRains #சென்னைமழை மேட்டூர் டேம் மட்டுமே கண்ணுக்கு தெரிஞ்ச நம்ம ஆளுகளுக்கு மத்த ஏரிகள பத்தி தெரியாம போச்சே... என்கிறது இந்த டிவிட்
|
சென்னை இப்படிதான் நிக்குது
யோவ் நீ வேற மழை முன்னாடி சென்னை இப்படி தான் நிக்குது.. என்கிறது இந்த மீம்
|
வாக்குச்சாவடிகளில் தஞ்சம்
பாவம் செய்த இடத்திலே புண்ணியத்தை தேடும் சென்னை மக்கள்..
வீட்டினுள் மழை நீர் வந்துள்ளதால் அனைவரும் வாக்குச்சாவடிகளில் தஞ்சம்..!! என்கிறது இந்த டிவிட்
|
வீட்டுக்குள் மழைநீர்
விரும்பி
வந்த விருந்தினரும்
வருந்தி
திரும்புகின்றனர்
வீட்டுக்குள் நுழைந்த
மழைநீரால் ! என்கிறார் இந்த வலைஞர்












Click it and Unblock the Notifications