தெரியாம சாவு மாலைய மிதிச்சிட்டேனே.. இப்போ என்னைய பாலோ பண்ணி பேய் வீட்டுக்கு வருமேடா!
சென்னை : 90ஸ் கிட்ஸ்களின் குழந்தைத்தனமான நம்பிக்கைகளையும், இப்போது அவர்கள் வாழும் வாழ்க்கையையும் கலாய்த்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.
90ஸ் கிட்ஸ்கள் வாழ்ந்த வாழ்க்கையே வேறு. வீட்டில் பெரியவர்கள் என்ன சொன்னாலும் அதை அப்படியே நம்பியவர்கள் அவர்கள். அதனால்தானோ என்னவோ இப்போது வரை அதே குழந்தை மனதுடன், அடிக்கடி ஏமாந்து போகிறார்கள் ( நாங்க சொல்லலைங்க.. சமூகவலைதளத்துல பேசிக்குறாங்க..).

உப்பைக் கீழே கொட்டினால் கண் இமையினால் அதை எடுக்க வைப்பார்கள் என்பதில் ஆரம்பித்து, யானை அருகில் சென்று, 'முறம் காது.. இடுக்கு கண்ணு' என்று சொன்னால், அது அதனை அப்படியே மனதில் வைத்திருந்து நம்மை பழி வாங்கும் என்பது வரை, அவர்கள் கடந்து வந்த நம்பிக்கைகளை வார்த்தைகளில் சொல்ல முடியாது. மாலையில் விளக்கு வைத்த பின் பாம்பு என்று சொன்னால் பாம்பு வீட்டுக்கு வந்து விடும், சாலையில் நடந்து செல்லும்போது, சாவு மாலையை மிதித்து விட்டால், அந்த பேய் நம் பின்னேயே வீட்டுக்குத் தேடி வந்து விடும் என்ற நம்பிக்கை எல்லாம் வேற லெவல் கற்பனைதான்.
இப்போதுள்ள குழந்தைகளிடம் இதையெல்லாம் சொன்னால், 'அய்யய்ய.. நீ அவ்ளோ மக்காவா இருந்த' என ஒரே வாக்கியத்தில் அசிங்கப்படுத்தி விடுவார்கள். ஆனாலும் அதை உண்மையென நம்பி, பயந்து வாழ்ந்தவர்கள்தான் நம் 90ஸ் கிட்ஸ்கள்.
அதனால்தான், நேரம் கிடைக்கும் போதெல்லாம் 90ஸ் கிட்ஸ்களைக் கலாய்த்து, அவர்களது இதுபோன்ற நம்பிக்கைகளை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து விடுகின்றனர் நம் நெட்டிசன்கள். இப்போதும் அப்படித்தான், "தெரியாம சாவு மாலைய மிதிச்சிட்டேனே.. இப்போ என்னைய பாலோ பண்ணி பேய் வீட்டுக்கு வருமேடா! " என்பது மாதிரியான நினைத்து நினைத்து சிரிக்கும்படியான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான 90ஸ் கிட்ஸ் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






















Click it and Unblock the Notifications