காரையே பாலத்துல நிறுத்துறாங்க.. ஆட்டோலாம் தாங்காது.. அடுத்த மழைக்குள்ள படகு வாங்கிடு!
சென்னை: அடுத்த வாரம் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் சொன்னாலும் சொன்னது, உடனே நம் நெட்டிசன்கள் மழை, வெள்ளம், படகு என மீம்ஸ்களைப் பகிர ஆரம்பித்து விட்டனர்.
நவம்பர், டிசம்பர் என்றாலே நம் நெட்டிசன்களுக்கு மழை பற்றிய மீம்ஸ்கள்தான் கொண்டாட்டமாக இருக்கும். நிஜத்தில் மழை பொழிகிறதோ இல்லையோ.. வெள்ளம் வருகிறதோ இல்லையோ.. ஆனால் சமூகவலைதளப் பக்கங்களில் மழை பற்றிய மீம்ஸ்களை வெள்ளம் போய் பாய்ந்தோடச் செய்து விடுவார்கள். அதிலும் சென்னையில் மழை என்றால் கேட்கவே வேண்டாம்.
இந்தமுறை சற்று வித்தியாசமாக மழை சென்னையை மறந்துவிட்டு, மற்ற மாவட்டங்களைப் பதம் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், வரும் வாரத்தில் சென்னை, செங்கல்பட்டு என வடதமிழத்திற்கும் பலத்த மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிறகென்ன இப்போதே மழை, வெள்ளம், படகு என மீம்ஸ்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டனர்.
"காரையே பாலத்துல நிறுத்துறாங்க.. ஆட்டோலாம் தாங்காது.. அடுத்த மழைக்குள்ள படகு வாங்கிடு மாணிக்கம்!" என அவர்கள் யோசிக்கும் வேகத்தைப் பார்த்தால், விரைவில் கார் ஷோரூம்களைப் போல், படகு ஷோரூம்களையும் சென்னையில் எதிர்பார்க்கலாம் போல...
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட மழை பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...



















Click it and Unblock the Notifications