“வா தலைவா வா.. வா.. உன்னைத்தான் தேடிட்டு இருந்தோம்.. இனி எங்க ஆட்டம் வேற லெவல்தான்!
சீனாவைப் போல் எப்போது நமக்கும் விடுமுறை விடுவார்கள் என இந்திய மாணவர்கள் கேட்பது மாதிரியான மீம்ஸ்கள்.
சென்னை: சீனாவைப் போல் எப்போது நமக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவார்கள் என நம்மூர் மாணவர்களும் எதிர்பார்ப்பதாக மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

மழை, வெயில் என விடுமுறை தரும் காரணிகளில் இப்போது கொரோனாவையும் சேர்த்து விட்டனர் நம் மாணவ கண்மணிகள். எந்த நாட்டிலாவது கொரோனா தொற்று அதிகரித்து அங்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டால், உடனே நமது நாட்டிற்கு எப்போது கொரோனா வரும், நமக்கு எப்போது விடுமுறை கிடைக்கும் என ஏங்க ஆரம்பித்து விடுகின்றனர் என ஜாலியாக அவர்களை கலாய்க்கின்றனர் மீமர்கள்.

அதிலும் குறிப்பாக மாஸ்டர் பட ஆடியோ வெளியீட்டின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை வைத்து உருவாக்கப்பட்டுள்ள மீம்ஸ் அர்த்தம் பொதிந்ததாக உள்ளது. அதாவது சீனாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால், எங்கே இங்கேயும் கொரோனாவால் 4வது அலை வந்து விடுமோ, நம் வேலை என்னாகுமோ என வேலை பார்ப்பவர்கள் கவலைப் படுவது போலும், ஆனால் அதற்கு நேர்மாறாக மாணவர்கள் அதையே சந்தோசமாக எதிர்பார்ப்பது போலவும் உள்ளது இந்த மீம்ஸ்.

இப்படி சிந்திக்கத் தூண்டும் விதத்தில் பல மீம்ஸ்களும், 'வா தலைவா.. வா.. வா.. உன்னைத்தான் எதிர்பார்த்தோம்..' என ஜாலி மீம்ஸ்களும் கலவையாக இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.

இதோ அவற்றில் சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...












Click it and Unblock the Notifications