உன்னை இனிமே நம்ப முடியாது.. எங்களை விட்டுட்டு எங்கேயும் போகமாட்டேன்னு சத்தியம் பண்ணு!
சீனாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால், நம் மாணவர்கள் ஆல்பாஸை எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் என்பது பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: சீனாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால், ஊரடங்கு என்ற செய்தியைக் கேட்டதுமே, நம் மாணவர்கள் இந்த வருடமும் ஆன்லைன் பரீட்சை தான்.. ஆல்பாஸ் தான் என இப்போதே சந்தோசப்பட ஆரம்பித்து விட்டதாக இணையத்தில் நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.

கடந்த சில நாட்களாக சீனாவில் மீண்டும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு சில நகரங்களில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதில் இருந்து, பெற்றோர்கள், 'ஐயய்யோ திரும்பவும் நமக்கு ஊரடங்கு போட்டு விடுவார்களோ..' என பொருளாதார ரீதியாக கவலைப்பட்டுக் கொண்டிருக்க, வழக்கம் போல நம் மாணவர்கள், 'ஐய்யா.. ஜாலி அப்போ நமக்கு ஆன்லைன் பரீட்சை தானா..' என லீவு மோடுக்கு மாறி விட்டார்கள் என கலாய்த்து வருகின்றனர் மீமர்கள்.

ரொம்பவும் சந்தோசப்பட்டு விடாதீர்கள் அது சீனாவில் தான் நம்மூரில் இல்லை.. நமக்கு மே மாதம் அக்னிப் பரீட்சை கன்பார்ம் என சில மீம்ஸ்கள் சுட்டிக் காட்டவும் மறக்கவில்லை. ரொம்பவும் உரிமையாக, 'இனிமே உன்னை நம்ப முடியாது.. எங்கேயும் போகாம எங்ககூடவே இரு..' என ஒரு மீம்ஸில் மாணவர்கள் கொரோனாவிடம் சத்தியம் கேட்பதெல்லாம் அல்டிமேட்.

நிஜமாகவே மாணவர்கள் இப்படி நினைக்கிறார்களோ இல்லையோ.. ஆனால் முன்பு மழை, வெயில் மாதிரி இப்போது லீவு தருவோர் பட்டியலில் கொரோனாவும் சேர்ந்து விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. இதோ மாணவர்களின் மனநிலையை வைத்து பகிரப்பட்டு வரும் சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு...













Click it and Unblock the Notifications